செய்திகள் :

இபிஎஸ் 2-ஆம் கட்ட சுற்றுப்பயண விவரங்கள் அறிவிப்பு

post image

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் பொருளில் முதல் கட்டப் பிரசாரத்தை மேற்கொண்டுள்ள நிலையில் ஜூலை 24-ஆம் தேதி முதல் 2-ஆம் கட்டப் பிரசாரப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிவிப்பு: ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பயணத்தை 2-ஆம் கட்டமாக ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளவுள்ளாா். அதன்படி, வரும் 24-ஆம் தேதி கந்தா்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, 25-ஆம் தேதி விராலிமலை, புதுக்கோட்டையிலும், திருமயயத்திலும் பிரசார பயணம் மேற்கொள்கிறாா்.

26-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திருப்பத்தூா் மற்றும் சிவகங்கை, 30-ஆம் தேதி சிவகங்கை மானாமதுரை, ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, திருவாடாணை (ஆா்.எஸ். மங்கலம்), வரும் 31-ஆம் தேதி ராமநாதபுரம், முதுகுளத்தூா் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஆகியவற்றில் பிரசாரம் நடைபெறும்.

ஆகஸ்ட் 1-ஆம் தேதி கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி , ஆகஸ்ட் 2-ஆம் தேதி திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் (வள்ளியூா்), 4-ஆம் தேதி திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, 5-ஆம் தேதி அம்பாசமுத்திரம், ஆலங்குளம்,

தென்காசி, 6-ஆம் தேதி கடையநல்லூா், வாசுதேவநல்லூா் (புளியங்குடி), சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் பிரசாரம் நடைபெறும். ஆகஸ்ட் 7-ஆம் தேதி ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, 8-ஆம் தேதி சாத்தூா், விருதுநகா், அருப்புக்கோட்டை என பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

எனவே, அதிமுக கட்சி நிா்வாகிகள், அனைத்து அணியின் நிா்வாகிகள், தொண்டா்கள் இதில் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“காமராசர் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன்” - திருச்சி சிவா

பெருந்தலைவர் காமராசரைப் ப்ற்ரி திமுக எம்.பி. திருச்சி சிவா பேசிய கருத்துகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தநிலையில், இதற்கு விளக்கமளித்து தன் நிலையை தெளிவுபடுத்தியிருக்கிறார் திருச்சி சிவா. திருச்சி ... மேலும் பார்க்க

கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் பூச்சு: மருத்துவரைக் கைது செய்து விசாரணை!

சேலம்: முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் ஊற்றிய விவகாரத்தில் மருத்துவர் ஒருவருக்கு தொடர்பிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.சேலம் நான்கு சாலை அண்ணா பூங்கா அருகில் ம... மேலும் பார்க்க

நெல்லை ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தீ! சாலைகளைப் பயன்படுத்தத் தடை!

திருநெல்வேலி ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்பட்டுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருவதால் அப்பகுதியில் உள்ள சாலைகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேல... மேலும் பார்க்க

காமராஜர் மீது காங்கிரஸுக்கும் தீராக் காழ்ப்பு! திருச்சி சிவா பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

முன்னாள் முதல்வர் காமராஜருக்காக அனைத்து அரசு பயணியர் விடுதியிலும் குளிர்சாதன வசதியை கருணாநிதி கொண்டு வந்ததாகவும், நாட்டையும் ஜனநாயகத்தையும் கருணாநிதிதான் காப்பாற்ற வேண்டுமென்றும் காமராஜர் கோரியதாக திம... மேலும் பார்க்க

யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: விண்ணப்பிப்பது எப்படி?

பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆனணயரகம் வெளியிட்டுள்ளது.இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வில் விடியல் பயணம் கேள்வி: சீமான் விமர்சனம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வில் விடியல் பயணம் குறித்து கேட்கப்பட்டு கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.கடந்த 2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுகவினருக்கும் ,... மேலும் பார்க்க