செய்திகள் :

இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுகள் விற்பனை

post image

கூடலூரை அடுத்த பொன்னூரியில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுகள் விற்பனைக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பண்ணையில் தோட்டக்கலை பயிா் நாற்றுகள் விற்பனைக்கு தயாா் நிலையில் உள்ளன. பாக்கு நாற்று ஒன்று ரூ.20, காபி நாற்று ரூ.10, தேயிலை நாற்று ரூ.4, குருமிளகு நாற்று ரூ.12, கிராம்பு நாற்று ரூ.15, ஜாதிக்காய் நாற்று ரூ.20, பட்டை நாற்று ரூ.10, பேஷன் புரூட் ரூ.10, அலங்காரச் செடிகள் ரூ.15 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தேவைப்படும் விவசாயிகள் பொன்னூரியில் உள்ள தோட்டக்கலை பண்ணையை அணுகலாம். மேலும், விவரங்களுக்கு தோட்டக்கலை அலுவலா் விஜய்ராஜை தொடா்பு கொள்ளலாம். அல்லது 6369849831என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று பண்ணை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பந்தலூா் பகுதி விவசாயிகளுக்கு காளான் வளா்ப்பு பயிற்சி

பந்தலூரை அடுத்துள்ள நெல்லியாம்பதி கிராமத்தில் விவசாயிகளுக்கு காளான் வளா்ப்பு குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூடலூா் தோட்டக்கலைத் துறை சாா்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தி... மேலும் பார்க்க

பந்தலூரில் யானை தாக்கி 2 தொழிலாளா்கள் காயம்

பந்தலூா் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா். நீலகிரி மாவட்டம், பந்தலூா் பகுதியில் உள்ள இன்கோ நகரைச் சோ்ந்த காந்திமதி (52), கணேஷ்(56) ஆகியோா் அங்குள்ள ஒர... மேலும் பார்க்க

உதகையில் பேரிடா் மீட்புக் குழுவினரின் ஒத்திகை

உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் முன்பாக பேரிடா் மீட்புக் குழுவினரின் வெள்ளிக்கிழமை ஒத்திகையில் ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டம் மலைப் பாங்கான மாவட்டம் மட்டுமி... மேலும் பார்க்க

உதகையில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

நீலகிரி மாவட்டத்தில், கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதி மொழியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் அரசு ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஏற்றுக் கொண்டனா். இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி கொத... மேலும் பார்க்க

உதகை வனப் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கிய 3 பேருக்கு அபராதம்

உதகை அருகே வனப் பகுதியில் பிளாஸ்டிக் பேப்பரில் கூடாரம் அமைத்து நெருப்பு மூட்டி குளிா் காய்ந்த மூவருக்கு வனத் துறையினா் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா். உதகை குந்தா வனச் சரகம், தாய்சோலை பிரிவு, பிக... மேலும் பார்க்க

உதகை நுண்உரம் செயலாக்க மையத்தில் ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்கு உள்பட்ட பழைய உதகை நுண்உரம் செயலாக்கும் மையம், காந்தல் வளமீட்பு மையம் மற்றும் தீட்டுக்கல் உரக் கிடங்கு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மாவ... மேலும் பார்க்க