செய்திகள் :

இராக்கில் தொடரும் அவலம்.. வணிக வளாகத்தில் பயங்கர தீ! 60 பேர் பலி!

post image

இராக் நாட்டின் கிழக்குப் பகுதியில், புதியதாகத் திறக்கப்பட்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குழந்தைகள் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாசிட் மாகாணத்தின் குட் நகரத்தில், புதியதாகத் திறக்கப்பட்ட 5 அடுக்குமாடிகளைக் கொண்ட வணிக வளாகத்தில், நேற்று (ஜூலை 16) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 61 பேர் பலியானதாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில், பெரும்பாலானோர் மூச்சுத்திணறி பலியானதாகக் கூறப்படும் நிலையில், தீயில் கருகி பலியான 14 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் இருந்து 45-க்கும் மேற்பட்டோரை இராக் நாட்டின் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இருப்பினும், பலர் மாயமாகியுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இதையடுத்து, அம்மாகாணத்தின் ஆளுநர் முஹமது அல்-மய்யேஹ் 3 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில், அடுத்த 48 மணி நேரத்தில் முதற்கட்ட அறிக்கை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இராக் பிரதமர் முஹமது ஷியா அல்-சுடானி வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்துறை அமைச்சரை நேரில் சென்று ஆய்வு செய்து, தீ விபத்தை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இராக்கில் தரமற்ற கட்டுமான முறைகளினால், தீ விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகின்றது. கடந்த 2021 ஆம் ஆண்டு நசிரியா நகரத்தில் ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 முதல் 92 பேர் பலியானார்கள்.

கடந்த 2023-ம் ஆண்டு நினிவே மாகாணத்தில் கிறுஸ்துவர்கள் பெரும்பாலும் வசிக்கக் கூடிய ஹம்தானியா பகுதியிலிருந்த திருமண அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ராணுவ வாகனத்தில் பலூச். விடுதலைப் படை தாக்குதல்: மேஜர் உள்பட 29 பாக். வீரர்கள் பலி!

More than 60 people, including children, have been killed in a massive fire at a newly opened shopping mall in eastern Iraq.

எரிசக்திக்கே முன்னுரிமை..! நேட்டோவின் எச்சரிக்கையை நிராகரித்த இந்தியா!

ரஷியாவுடன் வர்த்தகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளக்கூடும் என நேட்டோ பொதுச் செயலர் விடுத்த எச்சரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது. மேலும், எரிசக்திக்கே முன்னுரிமை எனத் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு!

ஆப்பிரிக்க நாடுகளில், பிரான்ஸின் செல்வாக்குக் குறைந்து வரும் சூழலில், அதன் கடைசி மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் இருந்து பிரன்ஸ் படைகள் முற்றிலும் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஆப்பிரிக்காவி... மேலும் பார்க்க

காஸாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல்! 2 பேர் கொலை!

காஸாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயத்தின் மீது இஸ்ரேல் நடத்திய ஷெல் தாக்குதல்களில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல... மேலும் பார்க்க

சிரியா உள்நாட்டு மோதலுக்கு புதிய போர்நிறுத்தம் அறிவிப்பு! வெளியேறும் அரசுப் படைகள்!

சிரியா நாட்டின் ஸ்வேடா மாகாணத்தில், துரூஸ் இன ஆயுதக்குழுவுடனான மோதல்களுக்கு, புதியதாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து அரசுப் படைகள் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.துரூஸ் இனமக... மேலும் பார்க்க

ராணுவ வாகனத்தில் பலூச். விடுதலைப் படை தாக்குதல்: மேஜர் உள்பட 29 பாக். வீரர்கள் பலி!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ராணுவ மேஜரும் கொல்லப்பட்டார். பாகிஸ்தானில் தங்களுக்கென தனி ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஒரே நாளில் 30 பேர் பலி: "மழைக்கால அவசரநிலை" அறிவிப்பு!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருவமழை தொடர்பான சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் பலியாகியுள்ள நிலையில் மாகாண அரசு பல்வேறு பகுதிகளில் "மழை அவசரநிலையை" அறிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ... மேலும் பார்க்க