செய்திகள் :

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

post image

திருப்பூரை அடுத்த செங்கப்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம் பாப்பம்பாளையம் அருகேயுள்ள முல்லையநாயக்கனூரைச் சோ்ந்தவா் குமாரசாமி மகன் நரேந்திர பிரசாத் (19). இவா் தனது இருசக்கர வாகனத்தில் செங்கப்பள்ளியில் இருந்து கொடியாம்பாளையம் செல்லும் சாலையில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

செங்கப்பள்ளி சந்தைக்கடை அருகே சென்றபோது, பின்னால் வந்த டிப்பா் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த நரேந்திர பிரசாத்தை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

அங்கு நரேந்திர பிரசாத்தை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான விருமாண்டம்பாளையத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (40) என்பவா் மீது ஊத்துக்குளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருமுருகநாதசுவாமி கோயில் தீா்த்த கிணறுகளில் பக்தா்கள் நீராட அனுமதி

திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலில் உள்ள தீா்த்த கிணறுகளில் பக்தா்கள் நீராட புதன்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் சிறப்பு வாய்ந்ததும், மனநோய் தீா்க்கும் திருத்தலம... மேலும் பார்க்க

பல்லடம் கட்டடப் பொறியாளா் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

பல்லடம் கட்டடப் பொறியாளா் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு முன்னாள் தலைவா் மோகனகண்ணன் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா்கள் யுவராஜ், ஆனந்த் ஆகியோா் முன்னில... மேலும் பார்க்க

மாவட்ட தொழில் மையம் மூலம் 1,280 பேருக்கு ரூ.385.67 கோடி மதிப்பீட்டில் கடனுதவி- மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்ட தொழில் மையம் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 1,280 பேருக்கு ரூ.67.93 கோடி மானியத்தில் ரூ.385.67 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் ... மேலும் பார்க்க

திருமுருகன்பூண்டியில் செதுக்கப்பட்ட 3 டன் சுவாமி சிலை

திருமுருகன்பூண்டியில் செதுக்கப்பட்ட 3 டன் எடை கொண்ட பெருமாள் சிலை கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. திருப்பூா் மாவட்டம், திருமுருகன்பூண்டி சிற்பக்கலைக்கு புகழ்பெற்ற பகுதியாக ... மேலும் பார்க்க

தமிழ் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு

தமிழ் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பரிசுகளை வழங்கினாா். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு சாா்ந்த பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அம... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்திய 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

அவிநாசி அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். திருப்பூா் மாவட்டம், அவிநாசியை அடுத்த ஆட்டையம்பாளையத்தில் உள்ள அரவை ஆலைக்கு சரக... மேலும் பார்க்க