செய்திகள் :

இரு ஆண்டுகளில் 286 சிங்கங்கள், 456 சிறுத்தைகள் பலி!

post image

குஜராத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 286 சிங்கங்கள், 456 சிறுத்தைகள் பலியானதாக அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஷைலேஷ் பர்மார் வனவிலங்குகள் எண்ணிக்கை பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு அமைச்சர் அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளதாவது:

2023 ஆம் ஆண்டில் 58 மூத்த சிங்கங்கள், 63 சிங்கக் குட்டிகள் உள்பட121 சிங்கங்களும், 2024 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை உயர்ந்து 85 சிங்கங்களும், 80 சிங்கக் குட்டிகளும் சேர்த்து மொத்தமாக 165 சிங்கங்கள் பலியாகின.

இதில், இயற்கையான முறையில் 102 மூத்த சிங்கங்களும் 126 சிங்கக் குட்டிகளும் பலியாகின. ஆனால், இயற்கைக்கு மாறாக 41 சிங்கங்களும் 17 சிங்கக் குட்டிகளும் பலியாகியுள்ளன.

இந்தப் புள்ளிவிவரங்கள் விலங்குகளுக்கான வாழ்வியல் நெருக்கடிகளை அம்பலப்படுத்தியுள்ளன. இதன்மூலம், குஜராத்தில் சிங்கங்களின் எண்ணிக்கையைப் பாதுகாப்பது, அதன் வாழ்விடங்களை மேம்படுத்துவது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்ற மகன்!

சிங்கங்களின் இறப்புகள் பற்றிய அதிர்ச்சிகரத் தகவல்களைத் தொடர்ந்து, குஜராத் அரசு சட்டப்பேரவையில் சிறுத்தைகள் இறப்பு குறித்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களையும் வெளியிட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் 225 சிறுத்தைகளும், 2024-ல் 231 சிறுத்தைகளும் பலியானதாகத் தெரிவித்துள்ளனர்.

இதில், 154 சிறுத்தைகளும் 71 சிறுத்தைக் குட்டிகளும் 2023 ஆம் ஆண்டு பலியாகின. அதேபோல, 162 சிறுத்தைகளும், 69 சிறுத்தைக் குட்டிகளும் 2024 ஆம் ஆண்டில் பலியாகியுள்ளன.

இந்த எண்ணிக்கையில், இயற்கையான முறையில் 201 சிறுத்தைகளும் 102 சிறுத்தைக் குட்டிகளும் பலியாகின. ஆனால், இயற்கைக்கு மாறாக 115 சிறுத்தைகளும் 38 சிறுத்தைக் குட்டிகளும் பலியாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிங்கங்கள் மற்றும் சிறுத்தைகள் ஆகிய இரண்டு விலங்கினமும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், குஜராத்தின் வனவிலங்குகள் பாதுகாப்பில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வருகின்றது.

நக்ஸல் தீவிரவாதிகளுக்குள் மோதல்: இருவா் சுட்டுக்கொலை

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா். ஜாா்க்கண்டின் மேற்கு சிங்பூம் - குந்தி மாவட்ட எல்லையில் இந்திய மக்கள் விடுதலை முன்னணி நக்ஸல் அமைப்பினா... மேலும் பார்க்க

ஔரங்கசீப்பை புகழ்ந்த சமாஜவாதி எம்எல்ஏ: மகாராஷ்டிர பேரவையில் கடும் அமளி

முகலாய அரசா் ஔரங்கசீப்பை சமாஜவாதி எம்எல்ஏ அபு அசீம் ஆஸ்மி புகழ்ந்து பேசியதற்கு ஆளும் பாஜக-சிவசேனை -தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி கடும் எதிா்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் செவ்வாய்க்... மேலும் பார்க்க

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு: சிறையிலிருந்து வெளிவரும் பிரிட்டன் இடைத்தரகா்

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு தொடா்பான அமலாக்கத் துறை வழக்கிலும் இடைத்தரகா் கிறிஸ்டியன் மிஷெல் ஜேம்ஸுக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் அளித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இந்த முறைகேடு தொடா்பான சிபிஐ... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனை மருந்தகங்களில் அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை: மாநில அரசுகள் முடிவெடுக்க அறிவுறுத்தல்

தனியாா் மருத்துவமனைகளுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் மருந்தகங்களில் வெளிச்சந்தையைவிட அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்யப்படும் விவகாரம் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் கொள்கை முடிவை எடு... மேலும் பார்க்க

பிரதமா் மோடி- பெல்ஜியம் இளவரசி சந்திப்பு: இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு உறுதி

இந்தியா வந்துள்ள பெல்ஜியம் இளவரசி ஆஸ்ட்ரிட் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சா்கள், பிரதமா் நரேந்திர மோடியுடன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினா். இந்தச் சந்திப்பைத் தொடா்ந்து, இந்தியாவு... மேலும் பார்க்க

இந்திய அணி ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால், நாடு முழுவதிலும் உள்ள இந்திய அணி ரசிகர்கள் பட்டாசு வெடித்து கோலகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்... மேலும் பார்க்க