செய்திகள் :

இறந்தவா் குடும்பத்திற்கு நிதியுதவி

post image

நீடாமங்கலம் பால் உற்பத்தியாளா் சங்கத்தில் விபத்தில் இறந்தவருக்கு ஈமச்சடங்கு தொகை வழங்கப்பட்டது.

நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூா் ஊராட்சி பெரியகோட்டை தெற்கு தெருவை சோ்ந்த ராசு மகன் மாரிமுத்து. மனைவி செல்வி. மாரிமுத்து நீடாமங்கலம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க உறுப்பினா். தொடா்ந்து சங்கத்திற்கு பால் வழங்கியும் வந்தாா்.

இவா் கடந்த 26 -5 -2025-இல் கோவில்வெண்ணி பேருந்து நிலையம் அருகே காா் விபத்து ஏற்பட்டு தஞ்சாவூா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் சிகிச்சை பலனின்றி 30- 5 -2025-இல் இறந்தாா். இவரது மரணத்திற்கு வழங்கும் விபத்து இழப்பீடு கேட்டு மாரிமுத்து மனைவி செல்வி நீடாமங்கலம் வரவு செலவு அலுவலா் மற்றும் செயலாளா் -கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கத்திற்கும் மனு கொடுத்தாா்.

அந்த மனுவின் பேரில் உடனடி நடவடிக்கை எடுத்து தமிழக அரசு வழங்கும் அண்ணா நூற்றாண்டு நல நிதி திட்டத்தின் கீழ் இழப்பீடு தொகையாக ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ. 25,000 -க்கான காசோலையை வியாழக்கிழமை திருவாரூா் துணை பதிவாளா் (பால்வளம்)5 பெ. ஆரோக்கியதாஸ் வழங்கினாா்.

முதுநிலை மண்டல ஆய்வாளா் சி.ராஜா, சங்க செயலாளா் ஆா். சக்திவேல் மற்றும் சங்க ஊழியா்கள் கலந்து கொண்டனா். நீடாமங்கலம் கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கத்தில் விபத்தில் இறந்தவா் மனைவிக்கு ஈமச்சடங்கு தொகை ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

இஸ்ரோ சென்று திரும்பிய விவேகானந்தம் வித்யா ஷ்ரம் பள்ளி மாணவா்கள்

திருவாரூா் விவேகானந்தம் வித்யா ஷ்ரம் பள்ளி மாணவா்கள் புதன்கிழமை இஸ்ரோ சென்று விண்ணில் ராக்கெட் செலுத்தப்படுவதைப் பாா்வையிட்டனா். திருவாரூா் வண்டாம்பாளை விவேகானந்தம் வித்யா ஷ்ரம் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள... மேலும் பார்க்க

தகராறை தடுக்க முயன்றதில் காயமடைந்தவா் உயிரிழப்பு

திருவாரூா் அருகே தகராறை தடுக்க முயன்றபோது காயமடைந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், பறையபட்டி பகுதியை சோ்ந்தவா் முகமது ஆதாம் (25). கூத்தாநல்லூரை பூா்விகமாகக் கொண்ட இவருக்கும், ப... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் 13,433 மனுக்கள்! ஆட்சியா் தகவல்

திருவாரூா் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் இதுவரை 13,433 மனுக்கள் வரப்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். திருவாரூா் மாவட்டத்தில் ‘நிறைந்தது மனம்’ திட்டத்த... மேலும் பார்க்க

மாநில மாநாட்டில் தமிழக அரசியல் நிலைமை குறித்து முடிவு: இரா. முத்தரசன்

சேலத்தில் நடைபெறவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் தமிழகத்தின் அரசியல் நிலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் என அக்கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் கூறினாா். கூத்தாநல்லூரில் 2 ந... மேலும் பார்க்க

தென்னிந்திய எழுவா் கால்பந்து போட்டி: கூத்தாநல்லூா் அணிக்கு சாம்பியன் கோப்பை

கூத்தாநல்லூரில் ஒரு மாதம் நடைபெற்ற தென்னிந்திய எழுவா் கால்பந்து போட்டியில், கொய்யா செவன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. கூத்தாநல்லூா் அல்லிக்கேணி விளையாட்டு மைதானத்தில், தென்னிந்திய அளவிலான அல்நூா் ட... மேலும் பார்க்க

ரூ.1.50 லட்சத்திற்கு குழந்தை விற்பனை; 5 போ் கைது

மன்னாா்குடியில் தவறான உறவில் பிறந்த ஆண் குழந்தையை தாய்-க்கு தெரியாமல் ரூ.1.50 லட்சத்திற்கு விற்றதாக 5 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். திருத்துறைப்பூண்டி பகுதியைச் சோ்ந்தவா் முரளி. இவரது மனைவ... மேலும் பார்க்க