செய்திகள் :

இறுதிச் சடங்கில் ஊழியரின் சடலத்தை சுமந்துசென்ற பிரபல தொழிலதிபர்!

post image

அபுதாபியில் மாரடைப்பால் உயிரிழந்த தனது ஊழியரின் சடலத்தை லூலூ குழுமத் தலைவர் யூசப் அலி சுமந்து சென்றார்.

அபுதாபியை தலைமையிடமாக கொண்ட லூலூ குழுமத்துக்கு 23-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகள் உள்ளன. இந்தியாவிலும் பல்வேறு நகரங்களில் லூலூ வணிக வளாகங்கள் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அபுதாபியில் அல் வஹ்தா வணிக வளாகத்தில் உள்ள லூலூ ஹைபர் மார்ட்டில் மேற்பார்வையாளராக பணிபுரிந்த கேரளத்தைச் சேர்ந்த ஷிஹாபுதீன் என்பவர், கடந்த வாரம் மாரடைப்பால் பலியானார்.

இதையும் படிக்க : பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு கெடு விதித்த டிரம்ப்!

அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முடியாத நிலையில், அபுதாபியிலேயே இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில், நேரில் கலந்துகொண்ட யூசப் அலி பிரார்த்தனை மேற்கொண்டதுடன், அவரின் சவப்பெட்டியை தோளில் சுமந்து சென்றார்.

இந்த காணொலியை அவரது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து யூசப் அலி இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அவரது செயலுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

கேரளத்தை பூர்விகமாக கொண்ட யூசப் அலி, முன்னதாக கேரளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு உதவி செய்ததன் மூலம் அனைவராலும் பாராட்டப்பட்டார்.

எர்ணாகுளத்தைச் சேர்ந்த தம்பதி, கடந்த 2019ஆம் ஆண்டில் வீடு கட்டுவதற்காக நிதி நிறுவனத்திடம் ரூ. 4 லட்சம் கடன் பெற்றிருந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், அவரது கணவர் வீட்டைவிட்டு சென்றுவிட்டார்.

வட்டியுடன் கடன் தொகை ரூ. 8 லட்சத்தை எட்டிய நிலையில், நிதி நிறுவனத்தினர் வீட்டை பறிமுதல் செய்தனர். இந்த செய்தி அறிந்த யூசப் அலி, பாதிக்கப்பட்ட பெண்ணின் கடனை அடைத்ததுடன், அவருக்கு ரூ. 10 லட்சம் நிதியும் வழங்கி உதவினார்.

இந்த உதவியின் மூலம் பிரபலமான யூசப் அலி, தனது ஊழியரின் இறுதிச் சடங்கில் பங்கேற்று சவப்பெட்டியை சுமந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தனியார் கிடங்கிலிருந்து 400 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்!

இந்தூர்: இந்தூர் நிர்வாகமானது தனியார் கிடங்கிலிருந்து சுமார் 400 குவிண்டால் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.இந்தூர்-உஜ்ஜைன் சாலையில் உள்ள கிடங்கில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டு, குஜராத்துக்கு அன... மேலும் பார்க்க

கும்பமேளா: ரயிலில் இடம் கிடைக்காததால் ஏசி பெட்டிகளில் ஜன்னல்களை உடைத்து நுழைந்த பயணிகள்!

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டுள்ளது. அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிவிட்டு தங்கள் சொந்த ... மேலும் பார்க்க

தெலங்கானா: இன்றுமுதல் பீரின் விலையில் 15% உயர்வு!

தெலங்கானாவில் பீரின் விலையில் 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.தெலங்கானாவில் பீர் விலையை அதிகரிக்குமாறு கோரிய யுனைடெட் ப்ரூவெரிஸின் கோரிக்கையால் பீர் விலையில் 15 சதவிகிதம்வரையில் அதிகரித்து தெலங்கானா ... மேலும் பார்க்க

4 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய கல்யாணராமன் கைது!

இன்றைய இளைஞர்கள் பலர் திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் தவிக்கும் சூழலில், கேரளத்தைச் சேர்ந்தவொரு வாலிபர் இளம்பெண்கள் நால்வரை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்திருப்பது தெரிய வந்துள்ளது... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ஆசிரியை.. கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறப்போகும் முதல் ஆள்!

தேவநாகரி: கர்நாடக மாநிலத்தில் பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பின், ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை காரிபசம்மா (85) கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறும் முதல் ஆளாக மாறப்போகிறார்.கண்ணியத்துடன் இறக்... மேலும் பார்க்க

கட்சிவிட்டுக் கட்சி தாவுவது காங்கிரஸ் கலாசாரம்! -ஆம் அத்மி

புது தில்லி : ஆம் ஆத்மி கட்சிக்குள் எந்தவொரு சலசலப்பும் இல்லை என்று பஞ்சாப் மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற... மேலும் பார்க்க