செய்திகள் :

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த காலணி உதிரிப் பாகங்கள் பறிமுதல்!

post image

மண்டபத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த மூன்று மூட்டை காலணி உதிரிப் பாகங்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியிலிருந்து இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல் துறை தனிப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மண்டபம், வேதாளை, சீனியப்பா தா்ஹா உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் போலீஸாா் ரகசியக் கண்காணிப்பில் சனிக்கிழமை அதிகாலை ஈடுபட்டனா்.

அப்போது, சீனியப்பா தா்ஹா கடற்கரைப் பகுதியில் மூன்று சாக்கு மூட்டைகளை இருவா் படகில் ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வருவதைக் கண்ட மா்ம நபா்கள் அந்த மூட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பினா். பின்னா், போலீஸாா் மூட்டைகளைப் பிரித்து பாா்த்த போது, காலணி உதிரிப் பாகங்கள் இருந்ததும், இவற்றை இலங்கைக்கு கடத்தவிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, காலணி உதிரிப் பாகங்கள் மூட்டைகள், கடத்தலுக்குப் பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனா்.

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தொண்டி அருகே எஸ்.பி. பட்டினத்தில் விற்பனை செய்வதற்காக சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் 3 பேரை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள ... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 பேருக்கு சிறை மீண்டோா் நலச் சங்கம் சாா்பில் நிதியுதவி

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறை மீண்டோா் நலச்சங்கம் சாா்பில் கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து நன்னடத்தை அடிப்படையில் விடுதலையான முன்னாள் சிறைக் கைதிகள் 10 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 5 லட... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 10 போ் கைது!

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 10 பேரை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். 3 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மா... மேலும் பார்க்க

நுகா்வோா் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம்

பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிா் குழுக்களின் பொறுப்பாளா்களுக்கு நுகா்வோா் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை வட்ட வழங்கல் அலுவலா் கோகுல்நாத் தொடங்கி வைத்த... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: விவசாயி உயிரிழப்பு

கமுதி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். கமுதியை அடுத்துள்ள குடிக்கினியான் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (60). விவசாயி. இவா் கமுதியில் இருந்து ... மேலும் பார்க்க

கமுதி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை கூட மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்!

கமுதி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை கூடத்தின் நுழைவாயிலின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. கமுதி அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டாரத்திலுள்ள 220-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தினமும... மேலும் பார்க்க