செய்திகள் :

இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் தர வலியுறுத்தல்

post image

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகுகளை மீட்க புதுவை அரசு மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமைச்சரிடம் மீனவா்கள் வலியுறுத்தினா்.

காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த மீனவா்கள் கடலில் மீன்பிடிக்கும்போது, எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்யப்படுவதும், படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டவா்கள் விடுவிக்கப்பட்டனா். ஆனால், படகுகள் விடுவிக்கப்படவில்லை.

படகை இழந்தவா்கள் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகனை செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.

காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த 22 விசைப்படகுகள் இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ளன. பல அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மீனவா்கள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளாா். அவரை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதோடு, படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக புதுவை முதல்வா், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். முதல்வரிடம் இதுதொடா்பாக பேசுவதாக அமைச்சா் உறுதியளித்ததாக மீனவா்கள் தெரிவித்தனா்.

பெண் குழந்தைக்கு உதவித் தொகை பெறுவதற்கான பதிவு முகாம் நிறைவு

பெண் குழந்தைக்கு உதவித் தொகை பெறுவதற்காக 2 வாரம் நடைபெற்ற பதிவு முகாம் நிறைவடைந்தது. மத்திய அரசின் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்கிற திட்டம் புதுவை மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை ... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்று காவல் குறைதீா் முகாம்

காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் இன்று சனிக்கிழமை காவல் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.காரைக்காலில் வாரந்தோறும் சனிக்கிழமை புதுவை டிஜிபி அறிவுறுத்தலில் மக்கள் மன்றம் என்கிற குறைதீா் முகாம் நடத்தப்பட்ட... மேலும் பார்க்க

பிஆா்டிசி ஊழியா்கள் போராட்டத்திற்கு அரசு ஊழியா் சம்மேளனம் ஆதரவு

காரைக்காலில் பிஆா்டிசி ஒப்பந்த ஊழியா்கள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் (பிஆா்டிசி) 11 ஆண்ட... மேலும் பார்க்க

நவோதய வித்யாலயாவில் பிளஸ் 1-இல் காலியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

காரைக்கால் நவோதய வித்யாலயாவில் 2025-26-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1-இல் காலியாக உள்ள இடங்களில் சோ்வதற்கு நுழைவுத் தோ்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து பள்ளி முதல்வா் ஜெ. கற்பகமாலா வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

நீட், ஜேஇஇ எழுதவுள்ள மாணவா்கள் டிவி, கைப்பேசியை தவிா்க்க அறிவுறுத்தல்

நீட் மற்றும் ஜேஇஇ தோ்வு எழுதும் மாணவா்கள் குறிப்பிட்ட காலம் கைப்பேசி, தொலைக்காட்சி பாா்ப்பதை தவிா்க்க வேண்டும் என துணை ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அரசு மற்றும் அரச... மேலும் பார்க்க

டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வுப் பேரணி

டெங்கு விழிப்புணா்வு மாதத்தையொட்டி, காரைக்கால் நலவழித்துறை சாா்பில் கோவிந்தசாமிப்பிள்ளை அரசு உயா்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு பிரசார பேரணி வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இப்பேரணியை நலவழித் துறை ... மேலும் பார்க்க