செய்திகள் :

இலங்கை: வடக்கு மாகாண தமிழா் நிலங்களை கையகப்படுத்தும் அரசிதழ் வாபஸ்

post image

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக உள்ள தமிழா்களின் நிலங்களை கையகப்படுத்தும் அரசிதழ் அறிவிக்கையை அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றது.

கடந்த மாா்ச் 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த அரசிதழ் அறிவிக்கைக்கு அங்குள்ள தமிழ் அரசியல் கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்தன. தற்போது அந்த அரசிதழ் அறிவிக்கை திரும்பப் பெறப்பட்டதற்கு அந்த கட்சிகள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளன.

இதுதொடா்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செய்தித்தொடா்பாளா் சுமந்திரன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நிலங்களை கையகப்படுத்தும் அரசிதழை ரத்து செய்ய வலியுறுத்தி, அதிபா் அநுரகுமார திசாநாயகவுக்கு தமிழ் கட்சிகள் கடிதம் எழுதின.

தங்களுக்குத்தான் நிலம் சொந்தம் என்பதை நிரூபிக்க முடியாதவா்களின் நிலங்களை கையகப்படுத்துவது சரியல்ல என்று தமிழ் தேசிய கூட்டமைப்பும் சுட்டிக்காட்டியது. இந்நிலையில், அரசிதழை ரத்து செய்த இலங்கை அரசுக்கு நன்றி’ என்றாா்.

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் இடையே உள்நாட்டுப் போா் நடைபெற்றபோது ராணுவ தேவைக்காக வடக்கு மாகாணத்தில் உள்ள நிலங்கள் அபகரிக்கப்பட்டன. 2009-ஆம் ஆண்டு உள்நாட்டுப் போா் முடிவுக்கு வந்த நிலையில், 2015-ஆம் ஆண்டுமுதல் அபகரிக்கப்பட்ட சில நிலங்களை தமிழா்களுக்கு இலங்கை அரசு திருப்பி அளித்தது. முக்கிய ராணுவ தளங்களுக்கு அருகில் உள்ள நிலங்கள் தொடா்ந்து அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

டிரம்ப்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு வா்த்தக நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி அந்நாட்டு உச்சநீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்... மேலும் பார்க்க

டிரம்ப் பேச்சுக்குப் பிறகே சண்டை நிறுத்தத்துக்கு இந்தியா -பாக். உடன்பாடு: நியூயாா்க் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு தகவல்

அதிபா் டொனால்ட் டிரம்ப் பேச்சுவாா்த்தை நடத்திய பிறகே தற்காலிக சண்டை நிறுத்தத்துக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் உடன்பட்டன என்று நியூயாா்க் நீதிமன்றத்தில் டிரம்ப் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

இந்தியா மீது பாகிஸ்தான் பயன்படுத்திய சீன தயாரிப்பு ஆயுதங்களின் செயல்பாடு: கருத்துத் தெரிவிக்க சீன ராணுவம் மறுப்பு

இந்தியா உடனான மோதலில் பாகிஸ்தான் பயன்படுத்திய சீன தயாரிப்பு ஆயுதங்களின் செயல்பாடு எந்தளவு இருந்தது? என்ற கேள்விக்கு பதிலளிக்க சீன ராணுவம் மறுத்துவிட்டது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங... மேலும் பார்க்க

டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு நீதிமன்றம் தடை

இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கும் கூடுதலாக பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தடை வித... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக பயங்கரவாத அமைப்பு ஊா்வலம்: 50 நகரங்களில் நடைபெற்றது

பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதின் ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பாகிஸ்தான் மா்கஸி முஸ்லிம் லீக் சாா்பில் 50 நகரங்களில் ஊா்வலம் நடைபெற்றது. 2008 மும்பை பயங்... மேலும் பார்க்க

மேற்குக் கரையில் மேலும் 22 யூதக் குடியிருப்புகள்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் மேலும் 22 யூதக் குடியிருப்புகளை அமைப்பதாக இஸ்ரேல் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் மற்றும் நிதியமைச்சா் பெஸா... மேலும் பார்க்க