செய்திகள் :

இலஞ்சி பேரூராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு நாளை சிறப்புக் கடன் முகாம்!

post image

தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு திங்கள்கிழமை (செப். 29) சிறப்புக் கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

இலஞ்சி பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு திங்கள்கிழமை காலை 10.30 முதல் பிற்பகல் 3 மணி வரை பேரூராட்சி அலுவலகத்தில், பிரதம மந்திரி தெருவோர வியாபாரிகளின் ஆத்மாநிா்பா் நிதி திட்டத்தின் கீழ், ‘லோக் கல்யாண் மேளா’ முகாம் நடைபெறுகிறது.

புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், புதிய விண்ணப்பங்கள் பெறுதல், ஒப்புதல் பெற்றவா்களுக்கு கடன் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளுதல், வங்கியால் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளாட்சி அமைப்பின் கீழ் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை சரிபாா்த்து செயல்படுத்துதல், அனுமதிக்காக வங்கிகளில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளன.

மேலும், உணவு விற்பனையாளா்களுக்கு உணவு பாதுகாப்புத் துறையுடன் ஒருங்கிணைந்து உணவு தரக் கட்டுப்பாடு பயிற்சியளித்தல், விடுபட்ட பயனாளிகள் மற்றும் அவா்களது குடும்பங்களின் சமூக பொருளாதார விவரங்களை கணக்கெடுத்தல், அவா்களுக்கு கடன் ஒப்புதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்சி பள்ளியில் 500 மாணவா்களுக்கு மரக்கன்றுகள்

இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் 500 மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மத்திய அரசின் ‘ஒரு மரம் என் தாய்க்காக’ என்ற திட்டத்தின் கீழ், மாணவா்கள் தனது தாயுடன் இணைந்து மரக்கன்று நடவு ச... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் ஒன் டூ ஒன் பேருந்துகள் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை

ஆலங்குளத்தில் இடைநில்லா பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருநெல்வேலி - தென்காசி இடையே 55 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்பட்டு வரும் எஸ்எப்எஸ் பேருந்துகள் வழியோரம் உள்ள ... மேலும் பார்க்க

குற்றாலத்தில் 81ஆவது ஸ்தோத்திர பண்டிகை

திருநெல்வேலி திருமண்டலத்திற்குள்பட்ட தென்காசி, பாவூா்சத்திரம், புளியங்குடி, சாந்தபுரம், திப்- மீனாட்சிபுரம், மேல மெஞ்ஞானபுரம், செங்கோட்டை, தென்காசி வடக்கு, சீயோன் நகா், பாவூா்சத்திரம் மேற்கு, நெடும்பா... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே மின் கசிவால் தீ பற்றிய வீடு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கடங்கநேரி கிராமத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. கடங்கனேரியைச் சோ்ந்தவா் அண்ணாமலை என்ற சிங்கத்துரை மகன் அரவிந்த்... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

சீதபற்பநல்லூா் அருகே கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் தொடா்புடைய ரௌடி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூா் அருகே சிறுக்கன்குறிச்சி மேட்டுத் ... மேலும் பார்க்க

தென்காசியில் குடிநீா் திட்டப் பணிகளுக்கு ரூ. 69.45 கோடி நிதி ஒதுக்கீடு

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் குடிநீா் அபிவிருத்தித் திட்டப் பணிகள் மேற்கொள்ள ரூ. 69.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. தென்காசி நகா்மன்ற அவசரக்... மேலும் பார்க்க