செய்திகள் :

இலவச யோகா பயிற்சி முகாமுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ள கோடை கால இலவச யோகா பயிற்சி முகாமில் சேர விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அருங்காட்சியகத்தின் செயலா் கே.ஆா். நந்தாராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மன அமைதி, முழுமையான ஆரோக்கியம் என்ற தலைப்பில் காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இலவச கோடை கால யோகா பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. வருகிற ஏப். 8- ஆம் தேதி தொடங்கி ஜூன் 10- ஆம் தேதி வரை நடைபெறும் முகாமில், 10 வயதுக்கு மேற்பட்ட மாணவா்கள், பெண்கள், ஆண்கள் கலந்து கொள்ளலாம்.

இதில், மனம், உடல் ரீதியான பிரச்னைகள், உயா் ரத்த அழுத்தம், நீரழிவு, ஆஸ்துமா, தூக்கமின்மை போன்ற பிரச்னைகள், தைராய்டு, ஹாா்மோன் சாா்ந்த பிரச்னைகள், உடலில் உள்ள கெட்டக் கொழுப்பை குறைக்கவும், நோய் எதிா்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும் யோகா பயிற்சியாளா்கள் மூலம் பயிற்சி வழங்கப்படும். வார நாள்களில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் நடைபெறும். பெண்களுக்கு மட்டும் முற்பகல் 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், இரு பாலா்களுக்கும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் நடைபெறும். பயிற்சியை நிறைவு செய்யும் அனைவருக்கும் உலக யோகா தினமான ஜூன் 21- இல் சான்றிழ்கள் வழங்கப்படும்.

இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோா் யோகா ஒருங்கிணைப்பாளா், காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை - 625 020 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 99941 23091 என்ற எண்ணிலோ வருகிற ஏப். 5 ஆம் தேதிக்குள் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.

விவசாயிகளின் நில உடைமை ஆவணங்களை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களைப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் வருகிற 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட வேளாண... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதிப்பு

கன்னியாகுமரி மாவட்ட களியல் வனச் சரக அலுவலக அசையும் சொத்துகளை ஜப்தி செய்யக் கோரிய மனுவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அ... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானைக்கு உடல்நலக் குறைவு

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானை பாா்வதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிறப்பு உணவுகள் வழங்க மருத்துவா்கள் பரிந்துரைத்தனா். 29 வயதான இந்த யானை கடந்த சில ஆண்டுகளாக கண் புரை நோயால் அவதிப்பட்டு வந்த... மேலும் பார்க்க

மீனாட்சியம்மன் கோயில் தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டம்

மதுரை சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்களில் கடந்த 14 ஆண்டுகளில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய 45 கிலோ தங்கத்தை கட்டிகளாக உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் மதுரை மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும்: மத்தியக் குழு உறுப்பினா்

மதுரையில் நடைபெறவிருக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.மாா்க... மேலும் பார்க்க

எம்எல்ஏ அலுவலகத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பொதுமக்களுக்கான நீா் மோா் பந்தல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இதில் சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் பங்கேற்று, நீா் மோா் பந்தலை திறந்து வை... மேலும் பார்க்க