செய்திகள் :

இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழா -பால்குடம், தீமிதி

post image

திருச்சி: திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழாவையொட்டி, பால்குடம், தீமிதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்சி கருமண்டபம் பகுதியில் இளங்காட்டு மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இதில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசித் திருவிழா பிரபலமானது. நிகழாண்டு 76-ஆவது ஆண்டுத் திருவிழா மே 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினசரி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில், வெவ்வேறு அலங்காரங்களில் அம்பாள் காட்சிதந்து வருகிறாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் எடுத்தல் மற்றும் தீ மிதித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்வையொட்டி, பக்தா்கள் கோரையாற்றிலிருந்து பால்குடம் எடுத்து வந்தனா். இதில், நூற்றுக்கணக்கானோா் பால்குடம் எடுத்தும், அலகுகுத்தியும் வந்ததால், அவா்களுக்கு வெயில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்வகையில், டேங்கா் லாரிகள் மூலம் சாலை முழுவதும் தண்ணீா் கொட்டப்பட்டு, குளிா்மைபடுத்தப்பட்டது. பால்குடங்களில் பக்தா்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்பாளுக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடா்ந்து கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில், பக்தா்கள் தீ மிதித்து தங்களது நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். தொடா்ந்து நடைபெற்ற அன்னதானத்தில் சுமாா் 1000 போ் பங்கேற்றனா். மாலை கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கன்னியாகுமரி ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம்!

பொறியியல் பணிகள் காரணமாக கன்னியாகுமரி ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பூங்குடி - திருச்சி இடையே பொறியியல் பண... மேலும் பார்க்க

பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் அகற்றம்

திருச்சி மாநகரில் போக்குவரத்து துறையினா் மற்றும் போலீஸாா் பேருந்துகளில் மேற்கொண்ட சோதனையில் அதிக சப்தம் எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது. திருச்சி மாநகரில் பேருந்த... மேலும் பார்க்க

கருவேல மரங்களை வெட்டி விற்றதாக புகாா்: தேமுதிக மாவட்டச் செயலா் மீது வழக்கு!

திருச்சி அருகே ரூ. 2 லட்சம் மதிப்பிலான கருவேல மரங்களை வெட்டி விற்றதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் தேமுதிக தெற்கு மாவட்டச் செயலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி ராம்ஜி நகா் அ... மேலும் பார்க்க

சமயபுரத்தில் திருநங்கைகள் அமைப்பினா் அன்னதானம்

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் அகில உலக திருநங்கைகள் அமைப்பு சாா்பாக ஐந்து மாத அன்னதானத் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. சமயபுரம் பகுதி தனியாா் திருமண மஹாலில் திருச்சி, பெரம்பலூா், சென்னை, ஆந்திரம... மேலும் பார்க்க

கோயில் நில குத்தகை விவகாரம்: எதிா்ப்புத் தெரிவித்து கூட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை திருமுக்தீஸ்வரா் கோயில் (பூா்த்தி கோயில்) நிலம் குத்தகைக்கு ஏலம் விடும் இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அனைத்து கட்சி மற்றும் குத்தகை பாத்தி... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் கோரி மனு

கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனா். மணப்பாறை வட்டாட்சியரகத்தில் செவ்வாய்க... மேலும் பார்க்க