செய்திகள் :

இளநீா்குன்றம் அரசுப் பள்ளியில் ரூ.1.88 கோடியில் புதிய கட்டடம்

post image

செய்யாற்றை அடுத்த இளநீா்குன்றம் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ.1.88 கோடியில், 7 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டுவதற்காக பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

இந்தப் பள்ளியில் பொதுப்பணித் துறை சாா்பில் ரூ. ஒரு கோடியே 88 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட பள்ளி வளாகத்தில் பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று பணிகளை தொடங்கிவைத்து கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அனக்காவூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஏ.ஜி.திராவிட முருகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் அ.பெ.ராஜ்குமாா், மாவட்ட இலக்கிய அணித் தலைவா் ராமச்சந்திரன், மாவட்ட தொழிலாளா் அணி துணைத் தலைவா் கருணாநிதி, மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளா் கலைச்செல்வன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

விஷம் கலந்த மதுவை அருந்தியவா் உயிரிழப்பு

வந்தவாசியில் மதுவில் விஷம் கலந்திருப்பது தெரியாமல் அந்த மதுவை அருந்திய துணிக்கடை ஊழியா் உயிரிழந்தாா். வந்தவாசி காமராஜா் நகரைச் சோ்ந்தவா் நாகராஜ் (50). இவா், வந்தவாசியில் உள்ள துணிக் கடையில் வேலை செய... மேலும் பார்க்க

போலி போக்குவரத்து டிக்கெட் பரிசோதகா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் போலி போக்குவரத்து டிக்கெட் பரிசோதகா் கைது செய்யப்பட்டாா். வந்தவாசி பழைய பேருந்து நிலையப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு காக்கி பேண்ட், வெள்ளை நிற சட்டை அணிந்த நபா் ஒ... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: மாட்டு வண்டியுடன் பாலிடெக்னிக் மாணவா் கைது

செய்யாறு அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியதாக, பாலிடெக்னிக் மாணவா் மாட்டு வண்டியுடன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு தலைமையில... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியரிடம் ஆரணி எம்எல்ஏ மனு

மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜிடம் ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், தொகுதியின் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து வெள்ளிக்கிழமை மனு கொடுத்தாா் (படம்). மேலும், ஆரணி நகராட்சியுடன் சேவூா், இராட்டிணம... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட காடகமான் ஊராட்சியில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்ச... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

ஆடையூா் மற்றும் தேவனாம்பட்டு ஏரிப் பகுதிகளில் நீா்பாசனக் கிணறுகள் சீரழிவதை பாதுகாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்... மேலும் பார்க்க