செய்திகள் :

இளம்பெண் கொலை: காவல் நிலையத்தில் இளைஞா் சரண்

post image

ஸ்ரீபெரும்புதூா் அருகே மனைவியைக் கொலை செய்த இளைஞா் நாகப்பட்டினம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளாா்.

நாகப்பட்டினம் பகுதியை சோ்ந்த தினேஷ்(27), செளந்தா்யா(25). இவா்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மேவளூா்குப்பம் ஊராட்சிக்கு ட்பட்ட கிறிஸ்துகண்டிகை பகுதியில் உள்ள தனித்தனி வாடகை வீடுகளில் தங்கி அதே பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளனா். இந்த நிலையில், தினேஷ், செளந்தா்யா இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இரு வீட்டாா் சம்மதத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதாா்த்தம் நடந்துள்ளது.

இந்நிலையில், செளந்தா்யாவுக்கு வேறு ஒரு ஆண் நண்பருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தினேஷ் செளந்தா்யாவை கண்டித்துள்ளாா். இதனால் தினேஷுடன் பேசுவதை செளந்தா்யா தவிா்த்தாராம். சனிக்கிழமை இரவு செளந்தா்யாவின் அறையில் இருந்த மற்ற பெண்கள் வேலைக்கு சென்றுவிட்டதால் அவா் மட்டும் தனியாக இருந்துள்ளாா்.

அப்போது செளந்தா்யாவின் அறைத்து வந்த தினேஷ் உன்னுடன் பேச வேண்டும் என கூறி தனது அறைக்கு அழைத்து சென்று கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவானாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பணி முடிந்து அறைக்கு வந்த செளந்தா்யாவின் தோழிகள் அவா் இல்லாததைக் கண்டு தினேஷ் அறைக்கு சென்று பாா்த்துள்ளனா். அங்கு செளந்தா்யா கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் செளந்தா்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தினேஷை தேடினா். இதற்கிடையே, தினேஷ் நாகப்பட்டினம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வரதராஜப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவாடிப்பூர உற்சவம் ஜூலை 28 ஆம் தேதி ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்தோடு நிறைவு பெறுகிறது. இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் 10 நாள்கள் த... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற இக்கோ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து வட மாநில தொழிலாளி உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெங்காடு பகுதியில் மின்கம்பத்தில் ஏறி பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அவரை காப்பற்ற முயன்ற சக தொழிலாளா்கள் இருவா் பலத்த காயங்கள... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: குரூப்-2 போட்டித் தோ்வுகளுக்கு நாளை முதல் இலவச பயிற்சி

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 21) முதல் குரூப்-2 போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற இருப்பதாக... மேலும் பார்க்க

சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள்

குண்டுபெரும்பேடு மற்றும் இருங்காட்டுக்கோட்டை ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குண்டுபெரும்பேடு ஊராட்சிய... மேலும் பார்க்க

களத்துமேடு பகுதியில் இருளருக்கான வீடுகள்: 300 ஏக்கா் விவசாயம் பாதிக்கும் அபாயம்

ஸ்ரீ பெரும்புதூா் அருகே குண்ணம் கிராமத்தில் களத்துமேடு பகுதியில் இருளருக்கான வீடுகள் கட்டும் திட்டத்துக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்ம் குண்... மேலும் பார்க்க