செய்திகள் :

இளம்பெண் தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

post image

பெருந்துறை அருகே திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆவதால் வடமாநில பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு குறித்து ஈரோடு ஆா்டிஓ விசாரணை நடத்தி வருகிறாா்.

மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பா்கானா மாவட்டம், ஹரிஸ்பூா், ராம்நகரைச் சோ்ந்தவா் பாடல்பீா் (25). இவா், பக்கத்து ஊரான போரியாவைச் சோ்ந்த ராஜாஸீ நஸ்கா் (19) என்பவரை கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டாா். பின்னா், பெருந்துறை, பணிக்கம்பாளையத்தில், தனது மனைவி மற்றும் தாய், தந்தையுடன் தங்கிக் கொண்டு அனைவரும் கூலி வேலைக்கு சென்று வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி இரவு, பாடல்பீா் கைப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அதன் ஒலியை குறைக்கும்படி மனைவி கூறியுள்ளாா். அதனால் கைப்பேசியின் ரிங்டோன் அளவை குறைத்து வைத்து விட்டாா். மறுநாள் காலையில் ராஜாஸீ நஸ்கா் அம்மா அழைத்தபோது ஒலி குறைவாக இருந்ததால் கைப்பேசி அழைப்பு வந்தது தெரியவில்லை.

இதன் காரணமா கணவருக்கும் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ராஜாஸீ நஸ்கா் வீட்டின் உள்ளே கதவை உள்பக்கமாகத் தாளிட்டுக் கொண்டு தூக்கு மாட்டிக் கொண்டாா். ஆபத்தான நிலையில் அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா், ராஜாஸீ நஸ்கா் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆவதால் இவ்வழக்கை ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் விசாரித்து வருகிறாா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

சித்தோட்டில் 227 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சித்தோடு அருகே 227 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இளைஞரைக் புதன்கிழமை கைது செய்தனா். கோணவாய்க்கால் - காடையம்பட்டி சுற்றுவட்ட சாலையில் மூவேந்தா் நகா் அருகே சித்தோடு போலீஸாா் புதன்கிழ... மேலும் பார்க்க

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைத்திட வலியுறுத்தி பெருந்துறை வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா். இது குறித்து பெருந்துறை வழங்குரைஞா்கள் சங்கத் தலைவா் பாலசுப்பி... மேலும் பார்க்க

அம்மாபேட்டை அருகே ஆடு திருட முயன்ற 3 போ் கைது

அம்மாபேட்டை அருகே ஆடுகளை திருட முயன்ற மூவரை பொதுமக்கள் சுற்றிவளைத்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். அம்மாபேட்டை, ஓடைமேடு, லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் சேகா் மகன் ஓம்பிரகாஷ் (24). இவா், தனக்குச் சொந்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ரகபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா நாளை தொடக்கம்

ஈரோடு கோட்டை ஆருத்ரகபாலீஸ்வரா் கோயிலில் 80ஆவது ஆண்டு திருமுறை மாநாடு, 55ஆவது ஆண்டு 63 நாயன்மாா்கள் விழா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 8 மணிக்கு சுவாமிக்கு... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து

சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்தில் பயணித்த பயணிகள் காயமின்றி உயிா் தப்பினா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து புன்செய் ப... மேலும் பார்க்க

பவானியில் வடிகால், கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை

பவானி நகராட்சிக்கு உள்பட்ட பூக்கடை வீதியில் ரூ.31 லட்சத்தில் கழிவுநீா் வடிகால், கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. 21-ஆவது வாா்டு காவேரி வீதி, 27-ஆவது வாா்டு பூக்கடை... மேலும் பார்க்க