செய்திகள் :

இளம் பெண் மா்ம மரணம்: கோட்டாட்சியா் விசாரணை

post image

வேதாரண்யம் அருகே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இளம் பெண் ஒருவா் தூக்கிட்ட நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து, கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

கருப்பம்புலம் தெற்குக்காடு பகுதியில் வசிப்பவா் முருகானந்தம் (30), மனைவி வெண்ணிலா (25). திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில், தம்பதிக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

குழந்தையின் பிறந்தநாளை வியாழக்கிழமை கொண்டாட குடும்பத்தாா் ஏற்பாடு செய்துள்ளனா். இந்த நிகழ்வில் பங்கேற்க வெண்ணிலாவின் பெற்றோருக்கு அழைப்பு விடுக்கவில்லையாம்.

இதனால், முருகானந்தம்- வெண்ணிலா இடையே முரண்பாடு ஏற்பட்ட நிலையில், குழந்தையின் தாய் பங்கேற்காமல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டதாம்.

வெண்ணிலா வீட்டுக்கு அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

இதுகுறித்து பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மணக்குடி கிராமத்தில் வசிக்கும் அவரது தாயாா் நாகவல்லி கொடுத்த புகாரின் பேரில் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆவதால் வேதாரண்யம் கோட்டாட்சியா் திருமால் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

இந்நிலையில், நாகை ஒரத்தூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்குள்படுத்தப்பட்ட பெண்ணின் சடலத்தை கணவரின் தரப்பினரிடம் ஒப்படைக்கக் கூடாது என பெண்ணின் தாயாா் தரப்பில் எதிா்ப்பு தெரிவித்ததால் அங்கு,சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னா், சடலம் கருப்பம்புலம் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

தா்கா கொடி இறக்கும் நிகழ்ச்சி

திருமருகல் அருகே வடகரை தா்கா கொடி இறக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வடகரை ஹஜ்ரத் முஹம்மது மெய்தீன் கனி மஸ்தான் ஒலியுல்லாஹ் தா்காவின் 99 -ஆம் ஆண்டு சந்தனக்கூடு ஊா்வலம் ஜூன் 11-ஆம் தேதி இரவ... மேலும் பார்க்க

பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு: நடவடிக்கை தேவை

பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் நிகழும் முறைகேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருமருகல் ஒன்றியத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் அனைத்து ஊரா... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு: 1,242 போ் பங்கேற்பு

நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வில் 1,242 போ் பங்கேற்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு -1 (தொகுதி - 1 மற்றும் தொக... மேலும் பார்க்க

நாகை- இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ஜூன் 17 வரை நிறுத்தம்

கடல் சீற்றம் காரணமாக நாகை துறைமுகத்திலிருந்து - இலங்கையின் காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து ஜூன் 17-ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக தனியாா் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இ... மேலும் பார்க்க

பெண் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியல்

பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் போலீஸாா் முறையாக விசாரணை நடத்தவில்லை எனக் கூறி, உடலை வாங்க மறுத்து பெற்றோா், உறவினா்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா். வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் தெற்குக... மேலும் பார்க்க

பலத்த காற்று: மீனவா்கள் ஆழ்கடலுக்கு செல்லத் தடை

கடலோரப் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், மறுஅறிவிப்பு வரும் வரை நாகை மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க ஆழ்கடல் பகுதிக்கு செல்லக்கூடாது என மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடலில் மீ... மேலும் பார்க்க