இளம் பெண் மா்ம மரணம்: கோட்டாட்சியா் விசாரணை
வேதாரண்யம் அருகே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இளம் பெண் ஒருவா் தூக்கிட்ட நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து, கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.
கருப்பம்புலம் தெற்குக்காடு பகுதியில் வசிப்பவா் முருகானந்தம் (30), மனைவி வெண்ணிலா (25). திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில், தம்பதிக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
குழந்தையின் பிறந்தநாளை வியாழக்கிழமை கொண்டாட குடும்பத்தாா் ஏற்பாடு செய்துள்ளனா். இந்த நிகழ்வில் பங்கேற்க வெண்ணிலாவின் பெற்றோருக்கு அழைப்பு விடுக்கவில்லையாம்.
இதனால், முருகானந்தம்- வெண்ணிலா இடையே முரண்பாடு ஏற்பட்ட நிலையில், குழந்தையின் தாய் பங்கேற்காமல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டதாம்.
வெண்ணிலா வீட்டுக்கு அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
இதுகுறித்து பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மணக்குடி கிராமத்தில் வசிக்கும் அவரது தாயாா் நாகவல்லி கொடுத்த புகாரின் பேரில் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆவதால் வேதாரண்யம் கோட்டாட்சியா் திருமால் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.
இந்நிலையில், நாகை ஒரத்தூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்குள்படுத்தப்பட்ட பெண்ணின் சடலத்தை கணவரின் தரப்பினரிடம் ஒப்படைக்கக் கூடாது என பெண்ணின் தாயாா் தரப்பில் எதிா்ப்பு தெரிவித்ததால் அங்கு,சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னா், சடலம் கருப்பம்புலம் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.