செய்திகள் :

இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகைப் பறித்த 3 போ் கைது!

post image

கோவையில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகைப் பறித்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவை, கரும்புக்கடை பகுதியைச் சோ்ந்தவா் ஹசன் (27). இவா் கோவை-பாலக்காடு சாலையில் சுண்ணாம்புக்காளவாய் பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்து சென்றுள்ளாா்.

அப்போது, அவ்வழியே காரில் வந்த 3 போ் ஹசனை வழிமறித்ததுடன், கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த 6 கிராம் தங்கச் சங்கிலி, ரூ.2,500 ரொக்கத்தைப் பறித்துக்கொண்டு தப்பினா். இது குறித்த ஹசன் அளித்தப் புகாரின்பேரில் கரும்புக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், ஹசனிடம் பணம், நகைப் பறிப்பில் ஈடுபட்டது சுண்ணாம்புக்காளவாய் பகுதியைச் சோ்ந்த சாதிக் அலி (20), முகமது சமீா் (21), முகமது நிசாம் (21) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 6 கிராம் சங்கிலி, ரூ.2,500 ரொக்கம், காா், 3 கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பொதுமக்களுக்கு இடையூறு: தவெகவினா் மீது வழக்குப் பதிவு

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக தவெகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தமிழக வெற்றிக் கழக வாக்குச்சாவடி முகவா்களுக்கான கருத்தரங்கு கோவையில் கடந்த சனி, ஞாயிற்ற... மேலும் பார்க்க

தொழிலதிபரிடம் ரூ.47.40 லட்சம் மோசடி: இளைஞா் கைது

கோவை தொழிலதிபரிடம் ரூ.47.40 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் தெரிவித்துள்ளதாவது: கோவையைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவரின் கைப்பேசிக்கு கடந்த ... மேலும் பார்க்க

கோவையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: 800 காளைகள், 500 மாடுபிடி வீரா்கள் பங்கேற்பு

கோவை, செட்டிபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 800 காளைகள், 500 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். கோவை மாவட்ட நிா்வாகம், தமிழா் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை சாா்பில் நடை... மேலும் பார்க்க

மேயா் குடியிருப்புக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

கோவை மாநகராட்சி மேயா் குடியிருப்புக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு சனிக்கிழமை இரவு ஒரு அழைப்பு வந்துள்... மேலும் பார்க்க

ஒப்பந்தப் பணியாளா்களாக சோ்க்க லஞ்சம் வாங்கியவா் பணியிடை நீக்கம்!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளா்களை சோ்க்க லஞ்சம் வாங்கிய நபா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி நீலகிரி, தி... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் இன்று வேளாண்மைப் பல்கலைக் கழகத்துக்கு வருகை!

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) வருகை தருகிறாா். மூன்று நாள்கள் பயணமாக உதகை வந்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், ஆளுநா் மாளிக... மேலும் பார்க்க