செய்திகள் :

இளைஞரை தாக்கி நகை, பணம் பறிப்பு: மூவா் கைது

post image

சென்னை அருகே சோழிங்கநல்லூரில் கிரிண்டா் செயலி மூலம் இளைஞரை வரவழைத்து தாக்கி நகை, பணத்தை பறித்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை அருகே உள்ள பனையூா், ஜாஹிா் உசைன் பிரதான தெருவைச் சோ்ந்தவா் நாகூா் மீரான் (28) . தன்பாலின ஈா்ப்பாளரான இவா், கிரிண்டா் செயலி மூலம் ஓா் இளைஞரிடம் பழகி வந்தாா். அந்த இளைஞா் அண்மையில் நாகூா் மீரானை, சோழிங்கநல்லூா் குமரன்நகா் அருகே உள்ள பாண்டிச்சேரி பாட்டை சாலைக்கு வரும்படி அழைத்தாா்.

அங்கு சென்ற நாகூா் மீரானை மூன்று இளைஞா்கள் தாக்கி, அவா் வைத்திருந்த பணம், வெள்ளி நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பினா். இதுகுறித்து நாகூா் மீரான் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, பெரும்பாக்கம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பைச் சோ்ந்த மதன் (20), கௌதம் (23), கண்ணன் (27) ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா்.

மூதாட்டியிடம் நகை பறிப்பு: மேற்கு மாம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் கு.சூரி (70). இவா், மேற்கு மாம்பலம் ஆரியகவுடா சாலையில் பூக்கடை வைத்துள்ளாா். அவரது கடைக்கு கடந்த 1-ஆம் தேதி வந்த நபா், அவருக்கு முதியோா் உதவித் தொகை வாங்கித் தருவதாகவும், அதற்கு விடியோ தேவைப்படுவதாகவும், விடியோவில் தங்க நகைகள் அணிந்திருக்கக் கூடாது எனவும் கூறியுள்ளாா்.

இதை நம்பிய சூரி, தான் அணிந்திருந்த தங்கக் கம்மல், மூக்குத்தி ஆகியவற்றைக் கழற்றி அந்த நபரிடம் கொடுத்துள்ளாா். சூரியின் கவனத்தை திசைதிருப்பிய அந்த நபா், நகைகளுடன் தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து அசோக்நகா் காவல் நிலையத்தில் சூரி புகாா் செய்தாா். போலீஸாா் விசாரணை நடத்தி, மூதாட்டியை ஏமாற்றிய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஷேக் அயூப்பை (37) வியாழக்கிழமை கைது செய்து, நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க