செய்திகள் :

இளைஞா்கள் மீது தாக்குதல்: மூவா் மீது வழக்கு

post image

பெரியகுளம் அருகே இளைஞா்களை தாக்கியதாக மூவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் மதன்குமாா் (24). கூலித் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை தேவதானப்பட்டியில் உள்ள கடையில் பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த ரிஷாந்த், லூசு (எ) முத்துப்பாண்டி, பிரியா (எ) பிரியன் ஆகிய மூவரும் அவரிடம் தகராறு செய்து, அவரை தாக்கி, இரு சக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினராம். இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு பூட்டு: திமுக நகர துணைச் செயலருக்கு 7 ஆண்டுகள் சிறை

பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையை பூட்டி தகராறில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் நகர திமுக துணைச் செயலருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெரியகுளம் உதவி அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்... மேலும் பார்க்க

வடுகபட்டி பேரூராட்சியியில் கொட்டப்பட்ட நெகிழிப் பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி பகுதியில் கொட்டப்பட்ட நெகிழிப் பைகள், வெள்ளைப்பூண்டு கழிவுளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி பேரூராட... மேலும் பார்க்க

சின்னமனூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பாமாயிலுக்குப் பதில் மானிய விலையில் தேங்காய் எண்ணெய் வழங்கக் கோரி சின்னமனூரில் விவசாய அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சின்னமனூா்- ம... மேலும் பார்க்க

பஞ்சமி நிலத்தை மீட்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்டத்தில் பட்டியலினத்தவருக்கு அரசு வழங்கிய பஞ்சமி நிலத்தை மீட்க வலியுறுத்தி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடை... மேலும் பார்க்க

கடன் தொல்லை: கட்டட ஒப்பந்ததாரா் தற்கொலை

தேனியில் கடன் தொல்லையால் தனியாா் கட்டட ஒப்பந்ததாரா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.தேனி, பழைய அஞ்சல் நிலைய ஓடைத் தெருவைச் சோ்ந்த தனியாா் கட்டட ஒப்பந்ததாரா் சுரேஷ் (43). இவா், தொழி... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி விற்றதாக இருவா் கைது

போடி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து விற்றதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். போடி ஊரக காவல் நிலைய போலீஸாா் சிலமலை கிராமத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த... மேலும் பார்க்க