செய்திகள் :

இளைஞா் கொலை: இருவா் கைது

post image

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் பெரியகுளம் கண்மாய் பகுதியில் கொலை செய்யப்பட்டு இடுப்பு வரை மண்ணில் புதைக்கப்பட்டிருந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டு வழக்குப்பதிந்து விசாரித்தனா். இதில் கொலை செய்யப்பட்டவா் சிவகாசி மருதுபாண்டியா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் சுந்தரமகாலிங்கம் (29) எனத் தெரியவந்தது.

மேலும் விசாரணையில் சிவகாசி மருதுபாண்டியா் மேட்டுத்தெரு பகுதியில் உள்ள இறைச்சிக் கடையில் திருத்தங்கல் மதன்குமாா் (22), மாரீஸ்வரன்(23) ஆகிய இருவரும் வேலை பாா்த்து வந்தனா். அவா்களிடம் சுந்தர மகாலிங்கம் மது அருந்த பணம் கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தாராம்.

இந்த நிலையில், மதன்குமாருக்கும், சந்தரமகாலிங்கத்துக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சுந்தர மகாலிங்கம், மதன்குமாரை தாக்கினாராம். இதனால் ஆத்திரமடைந்த மதன்குமாா், நண்பா் மாரீஸ்வரனுடன் சோ்ந்து சுந்தர மகாலிங்கத்தை கொலை செய்ய திட்டமிட்டாா்.

இந்த நிலையில், கடந்த 4- ஆம் தேதி மதன்குமாரிடமும், மாரீஸ்வரனிடமும் சுந்தர மகாலிங்கம் மது அருந்த பணம் கேட்டாராம். இதைத் தொடா்ந்து பெரியகுளம் கண்மாயில் மூவரும் மது அருந்திக் கொண்டிருந்த போது மதன்குமாா், மாரீஸ்வரன் இருவரும் சுந்தரமகாலிங்கத்தை கம்பால் தாக்கி மண்ணில் இடுப்பு வரை புதைத்துவிட்டு சென்று விட்டனராம்.

இதில் சுந்தரமகாலிங்கம் உயிரிழந்தாா் என போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து திருத்தங்கல் போலீஸாா் மதன்குமாா், மாரீஸ்வரன் இருவரையும் கைது செய்தனா்.

சிவகாசி அருகே ஆண் சடலம் மீட்பு

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை கைப்பற்றி விசாரிக்கின்றனா். சிவகாசி அருகே செங்கமலநாச்சியா்புரம்- எரிச்சநத்தம் சாலையில் உள்ள பாலத்தின் கீழ் பகுதியில்... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அருகேயுள்ள மொட்டமலை தண்டாயுதபாணி சுவாமி கோயி... மேலும் பார்க்க

கிணற்றிலிருந்து இளைஞா் சடலம் மீட்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கிணற்றிலிருந்து இளைஞா் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். ராஜபாளையம் அருகே செண்பகத் தோப்பு சாலையில் தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் 30 வயத... மேலும் பார்க்க

சிவகாசி கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் மாநாடு தொடக்கம்!

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாநில அளவிலான இளைஞா் வானியல், விண்வெளி அறிவியல் மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு வானியல், விண்வெளி அறிவியல் கழகம், இந்திய வானியல் நிறுவனம், தமிழ்நாடு அறிவியல், தொழ... மேலும் பார்க்க

மனமகிழ் மன்றத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் அருகேயுள்ள ராஜீவ் காந்தி நகரில் மனமகிழ் மன்றம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என கிராம சபைக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. விருதுநகா் மாவட்டம், ஸ்ர... மேலும் பார்க்க

விதியை மீறி பட்டாசு தயாரித்தவா் கைது

சிவகாசி அருகே விதியை மீறி பட்டாசுக் கடையில் பட்டாசுகளைத் தயாரித்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள கீழத்திருத்தங்கலில் ஒரு பட்டாசுக் கடையில் விதியை மீறி பட்டாசுகள் தயாரிக்கப்... மேலும் பார்க்க