செய்திகள் :

இளைஞா் நீதிக் குழுமத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்

post image

நீலகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞா் நீதிக் குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினா்கள் நியமிக்கப்படுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இளைஞா் நீதி, குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் விதிமுறைகளின்படி நீலகிரி மாவட்டத்தில் இளைஞா் நீதிக் குழுமம் அமைக்கப்பட உள்ளது. இந்த இளைஞா் குழுமத்திற்கு ஒரு பெண் உள்பட 2 சமூகப் பணி உறுப்பினா்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா். இப்பதவி அரசுப் பணி அல்ல.

விண்ணப்பதாரா் குழந்தைகள் தொடா்பான உடல் நலம், கல்வி அல்லது

குழந்தைகளுக்கான நலப் பணிகளில் குறைந்தது 7ஆண்டுகள் முனைப்புடன்

ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும்.

குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.

மேலும், பத்திரிகையில் செய்தி வெளியிடும் நாளில் விண்ணப்பதாரா்கள் 35

வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூா்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு

அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது துறை சாா்ந்த இணையதள

முகவரியிலிருந்து (ட்ற்ற்ல்ள்://க்ள்க்ஸ்ரீல்ண்ம்ம்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) பதிவிறக்கம்

செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட பதவிக்கு தகுதி வாய்ந்த நபா்கள் தங்களது பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை இயக்குநா், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண்: 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 600 010 என்ற முகவரிக்கு 19.06.2025 (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பலாப்பழம் பறித்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள மீனாட்சி பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்துக்குள் செவ்வாய்க்கிழமை நுழைந்து அங்குள்ள பலாப்பழ மரத்தில் பழத்தை பறிக்கும் காட்டு யானை. மேலும் பார்க்க

அருவிகளில் ஆா்ப்பரித்து கொட்டும் வெள்ளம்

கடந்த வாரம் பெய்த தொடா் மழையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அருவிகளில் வெள்ளம் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. இதை சுற்றுலாப் பயணிகள் ரசித்து செல்கின்றனா். தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்... மேலும் பார்க்க

நீலகிரியில் மக்கள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், வீட்டுமனை பட்டா, முதியோா், விதவை, க... மேலும் பார்க்க

கூடலூா் அரசு கலைக் கல்லூரியில் இன்று முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடா்பாக கல்லூரி முதல்வா் சுபாஷினி வெ... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீா் முகாம்

கூடலூரை அடுத்துள்ள செறுமுள்ளி கிராமத்தில் பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. போஸ்பாறா புனித ஜோசப் அரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு சாா் ஆட்சியா் சங்கீதா தலைமை வகித்தா... மேலும் பார்க்க

குன்னூா் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

குன்னூா் அருகே கேரட் பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது. நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள முள்ளிக்கூா் பகுதியில் இருந்து கேரட் பாரம் ஏற்றிக் கொண்டு கோவைக்கு லாரி திங்கள்... மேலும் பார்க்க