செய்திகள் :

இஸ்ரேல் - ஈரான் சண்டையால் பெட்ரோல் தட்டுப்பாடு வருமா?

post image

மேற்கு ஆசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் சண்டையால், தற்போதைக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என்று மத்திய அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச சந்தையில், எரிபொருள் தேவைக்கு அதிகமாகவே இருப்பில் உள்ளதாகவும், உடனடியாக உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இல்லை எனவும் அந்த தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக், நாள் ஒன்றுக்கு 120 மில்லியன் பேரல்களை உற்பத்தி செய்து வருகின்றன. தற்போது, இதில் 5 மில்லியன் பேரல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் 97 தற்போதும் நாள் ஒன்றுக்கு 97 மில்லியன் பேரல்கள் உற்பத்தியாகின்றன. இவை மட்டுமல்லாமல், ஏராளமான எரிபொருள் வழங்கும் நாடுகள் உள்ளன. அவை தேவைக்கு ஏற்ப எரிபொருளை வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன.

இதையும் படிக்க.. 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சௌதி இளவரசர் கண் விழித்தாரா? வைரலாகும் விடியோ

அது மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கு எரிபொருள் வழங்கும் பணியானது, கடல் வழியில் தடையின்றி நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கு நாள் ஒன்றுக்கு 5.6 மில்லியன் பேரல்கள் தேவைப்படும் நிலையில், தற்போது போர் நடைபெற்று வரும் பகுதி வழியாக இந்தியாவுக்கு வெறும் 1.5 முதல் 2 மில்லியன் பேரல்கள்தான் வருகின்றன.

மேலும், இந்தியா தனது எரிபொருள் தேவைக்காக 27 நாடுகளிலிருந்து எரிபொருள் வாங்குவதை தற்போது 40 நாடுகள் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. எனவே, நாட்டின் எரிபொருள் தேவை என்பது மிகவும் பாதுகாப்பாகவே உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல்-ஈரான் மோதலை நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்

இஸ்ரேலும் ஈரானும் தங்களுக்கு இடையிலான மோதலை நிறுத்த வேண்டும் என்று ஜி7 நாடுகள் கூட்டமைப்பு வலியுறுத்தியது. காஸா போர் நிறுத்தம் உள்பட ஈரான் பிரச்னைக்குக் காணப்படும் தீர்வானது, மத்திய கிழக்கு பிராந்தியத... மேலும் பார்க்க

மத்திய கிழக்கில் விமான நிலையங்கள் மூடல்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் விமான நிலையங்கள் மூடப்பட்டன. இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் மேலும் விரிவடையக் கூடும் என்ற அச்சத்தில், விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஏராளமான... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேற்றத்தை ஒருபோதும் ஏற்க முடியாது - அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக பெருமளவிலான மக்கள் வந்து குடியேறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் ந... மேலும் பார்க்க

தலாய் லாமாவின் பிறந்த நாள் கருணை தினம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் அறிமுகம்

திபெத்திய பௌத்த மதத் தலைவரான 14-ஆவது தலாய் லாமாவின் 90-ஆவது பிறந்தநாளை (ஜூலை 6) ‘கருணை தினமாக’ அறிவிக்கக்கோரி இரு உறுப்பினா்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானத்தை திங்கள்கிழமை அறிமுகம் செய்தனா். ஆள... மேலும் பார்க்க

ஈரான் மீது தீவிர தாக்குதல்: இஸ்ரேலுக்கு 20 இஸ்லாமிய நாடுகள் கண்டனம்

ஈரான் மீது இஸ்ரேல் முரட்டுத்தனமாக தாக்குதல் நடத்திவருவதாக 20 அரபு, இஸ்லாமிய, ஆப்பிரிக்க நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து அந்த நாடுகள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்... மேலும் பார்க்க

ஈரான் தலைவர் கமேனி பதுங்கியிருக்குமிடம் தெரிந்துவிட்டது: சரணடைந்தால் உயிர் பிழைக்கலாம் - டிரம்ப் எச்சரிக்கை!

ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனியை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதாக தகவல் கசிந்தது. இந்த நிலையில் கமேனி பதுங்கியிருக்குமிடம் தங்களுக்கு தெரிய வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த... மேலும் பார்க்க