செய்திகள் :

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்கா பயணம்! 7 மாதங்களில் 3வது முறை..!

post image

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரும் ஜூலை 7 ஆம் தேதியன்று அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் தொடங்கிய போரானது, கடந்த ஜூன் 24 ஆம் தேதியன்று 12-ம் நாளை எட்டியதுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக அறிவித்தார்.

அதனை ஏற்ற இருநாடுகளும், தங்களது தாக்குதல்களை நிறுத்தியதுடன். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் நெதன்யாகு வரும் ஜூலை 7 ஆம் தேதியன்று அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்மூலம், கடந்த ஜனவரியில் அதிபர் டிரம்ப்பின் ஆட்சி அமைந்தது முதல், 3-வது முறையாக பிரதமர் நெதன்யாகு அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.

இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் காஸாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு இடையில் நடைபெற்று வரும் போரை நிறுத்துமாறு, அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.

இதனால், பிரதமர் நெதன்யாகுவின் இந்தப் பயணத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போர்நிறுத்தம் குறித்து, கடந்த ஜூன் 27 ஆம் தேதியன்று, செய்தியாளர்களுடன் பேசிய அதிபர் டிரம்ப், அடுத்தவாரத்துக்குள் காஸாவில் போர்நிறுத்தம் கொண்டுவரப்படக்கூடும் எனக் கூறியிருந்தார். இருப்பினும், போர்நிறுத்த நடவடிக்கைகள் குறித்து மற்ற எந்தவொரு தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.

SUMMARY

Israeli Prime Minister Netanyahu's visit to the US! 3rd time in 6 months!

இதையும் படிக்க:வியூக கூட்டணி: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில்..!

இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்: சேதங்களை மதிப்பீடு செய்த ஈரான்!

ஈரானின் அணுசக்தி தளவாடங்கள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஏற்பட்ட சேதங்களை அந்நாட்டு அரசு மதிப்பீடு செய்துள்ளது. மேலும், அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அமெரிக்கா நடத்தவ... மேலும் பார்க்க

ஜெர்மனி யூதர்களை உளவுப் பார்க்கிறதா ஈரான்? டென்மார்க்கில் ஒருவர் கைது!

ஈரான் உளவுத் துறைக்காக ஜெர்மனி நாட்டிலுள்ள யூதர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் டென்மார்க் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். டென்மார்க் நாட்டைச் சேர்ந்த அலி எஸ், எனு... மேலும் பார்க்க

கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் செல்லவேண்டியிருக்கும்! - மஸ்க்கிடம் டிரம்ப் கறார்

கடையை மூடிவிட்டு மீண்டும் வீட்டுக்குச் செல்லவேண்டியிருக்கும் என்றும் ஸ்பேக் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். உலகின் பணக்காரர் வரிசையில் முன்னணியில் உள்ள ... மேலும் பார்க்க

வியூக கூட்டணி: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில்..!

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நடைபெறவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.இந்தோ - பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளில், அமெரிக்காவுக்கு மிகவும் முக்கிய நட்பு நாடுகளில் இந்தியா... மேலும் பார்க்க

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினா் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்தது

பெய்ஜிங்: சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் (சிபிசி) 10 கோடிக்கு மேற்பட்ட உறுப்பினா்கள் உள்ளதாக திங்கள்கிழமை வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 1921, ஜூலை 1-இல் நிறுவப்பட்ட சிபிசி-யில் 2024... மேலும் பார்க்க

ஈரானின் எவின் சிறை மீதான இஸ்ரேலின் தாக்குதல் நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று!

அயதுல்லா கமேனி தலைமையிலான ஈரான் அரசு தங்களுக்கு எதிராக அணு ஆயுதம் தயாரித்துவிடுமோ என்ற பயத்தில், அந்த அரசை வீழ்த்துவதற்காக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஒன்று எவின் சிறைத் தாக்குதல். அரசியல் கைதிகள்,... மேலும் பார்க்க