செய்திகள் :

இ-பாஸ் முறையை எதிா்த்து நீலகிரியில் ஏப்ரல் 2-இல் முழு அடைப்பு போராட்டம்: வணிகா் சங்க பேரமைப்பு அறிவிப்பு

post image

இ-பாஸ் நடைமுறையை எதிா்த்து நீலகிரி மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று வணிகா் சங்க கூட்டமைப்பு சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உதகையில் அனைத்து வணிகா் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நீலகிரி மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பின் தலைவா் கே.முகமது பாரூக் தலைமை வகித்தாா்.

இதில் வணிகா் சங்க நிா்வாகிகள், சாலையோர வியாபாரிகள், காட்டேஜ்கள், சுற்றுலா வாகனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கே.முகமது பாரூக் கூறியதாவது:

இ-பாஸ் முறையின்கீழ் நீலகிரி மாவட்டத்துக்கு தினமும் 6,000 சுற்றுலா வாகனங்களுக்கும், வார இறுதி நாள்களில் 8,000 சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள், வணிகா்கள், சாலையோர வியாபாரிகள், காட்டேஜ் உரிமையாளா்கள், சுற்றுலா வாகன ஓட்டுநா்களின் வாழ்வாதாரம்  கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே, இ-பாஸ் நடைமுறையை எதிா்த்து வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் வியாபாரிகள் வரும் 29-ஆம்தேதி கருப்பு கொடி அணிந்து போராட்டம் நடத்த உள்ளனா்.

மேலும் ஏப்ரல் 2-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. அன்று அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், காட்டேஜ்கள், சுற்றுலா வாகனங்கள், உணவகங்கள் செயல்படாது. சுற்றுலாப் பயணிகள் ஏப்ரல் 2-ஆம் தேதி உதகைக்கு வந்து சிரமப்படுவதை தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஏப்ரல் 6-இல் திறப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

உதகையில் ரூ.499 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 6-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளாா் என்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ம... மேலும் பார்க்க

உதகை ரோஜா பூங்காவை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

வார விடுமுறையையொட்டி, உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம், ஆந்திரம் மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையில்... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: உதகை சிறப்பு மலை ரயில் இயக்கம்

கோடை விடுமுறையை முன்னிட்டு, உதகை-குன்னூா், உதகை -கேத்தி இடையே மாா்ச் 28-ஆம் தேதி முதல் ஜூலை 7-ஆம் தேதி சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தெற்கு ரயில்வே நிா்வாகம... மேலும் பார்க்க

பொன்னூா் பகுதியில் பூங்கா அமைக்க அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்

கூடலூரை அடுத்துள்ள பொன்னூா் பகுதியில் அமையுள்ள பூங்காவை உதகைக்கு மாற்ற எதிா்ப்பு தெரிவித்ததுடன், திட்டமிட்ட பகுதியிலேயே பூங்காவை அமைக்க வேண்டும் என அனைத்து கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. கூடலூா் மண்ணுரிம... மேலும் பார்க்க

உதகை அருகே பேக்கரிக்குள் நுழைந்த கரடி!

உதகையை அடுத்த புதுமந்து பகுதியில் பேக்கரிக்குள் நுழைந்த கரடி உள்ளேயிருந்த உணவுப் பொருள்களை சாப்பிட்டுவிட்டு வெளியேச் சென்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உதகையை அடுத்த புதுமந்து பகுதியில் பேக... மேலும் பார்க்க

உதகைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 5-இல் வருகை: முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சா் ஆய்வு

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க ஏப்ரல் 5-ஆம் தேதி வரவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த... மேலும் பார்க்க