செய்திகள் :

ஈரானின் 6 விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! புதினை சந்திக்கும் ஈரான் அமைச்சர்

post image

ஈரானின் 6 விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நோக்கில் ஈரானின் ராணுவ, அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் 3 முக்கிய  அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது இந்த போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த மோதலை ஈரான் இத்துடன் நிறுத்திக்கொள்ளாவிட்டால், கடுமையான பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. அதேநேரத்தில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி மிகப்பெரிய தவறு செய்துவிட்டது என்று அந்நாட்டின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஈரானின் கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள 6 விமான நிலையங்களை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதத்தாக்குதலின்போது ஈரானின் எப்-14, எப்-5 மற்றும் ஏஹெச்-1 விமானங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் விமானநிலையத்தின் ஓடுபாதை, சுரங்கப்பாதை, எரிபொருள் நிரப்ப பயன்படும் விமானமும் சேதம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் புறப்படுவதையும் ஈரானின் விமானப்படை செயல்பாட்டையும் இஸ்ரேல் சீர்குலைத்துள்ளது என்றும் கூறியுள்ளது.

ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ரஷியா சென்று அதிபர் புதினை சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது: ஈரான் தலைவர் கமேனி

காஸாவில் சர்வதேச ஊடகங்களுக்குத் தடை விதிக்கும் இஸ்ரேல்!

உண்மையை மறைப்பதற்காக காஸாவில் சர்வதேச ஊடகங்களுக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரிட்டன் தேசிய செய்தித்தாளின் இளம் ஆசிரியராக இருந்த, அமெரிக்காவைச் சேர்ந்த பியர்ஸ் மோர்கன் இதனைத் த... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கான விமானங்களை ரத்து செய்தது பிரான்ஸ்!

ஈரான் உடன் போரில் ஈடுபட்டுள்ளதால் இஸ்ரேலுக்கு இயக்கப்படும் விமானங்களை ஜூலை 14ஆம் தேதி வரை ரத்து செய்வதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.இது குறித்து பேசிய பிரெஞ்சு ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்,... மேலும் பார்க்க

அமெரிக்கா, இஸ்ரேலின் அடுத்த குறி அரபு நாடுகளே: ஃபரூக் அப்துல்லா கண்டனம்!

ஸ்ரீநகர்: அமெரிக்கா, இஸ்ரேலின் அடுத்த குறி அரபு நாடுகளே என்று ஃபரூக் அப்துல்லா பேசியிருக்கிறார். இதன்மூலம், தேசிய மாநாட்டு(என் சி) கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா அரபு நாடுகளுக்கு இன்று(ஜூன் 23) எச்சர... மேலும் பார்க்க

ஈரானைத் தொடர்ந்து கத்தாருக்கு அச்சுறுத்தலா?

கத்தாரில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் தங்கள் குடிமக்களுக்கு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வருவதால், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், இது பதற்றமான சூழலை பிரதிபலிக்கவில்லை எனவும் கத்... மேலும் பார்க்க

ஈரானுக்கு உதவத் தயார்! அமெரிக்க தாக்குதலுக்கு கடும் கண்டனம்! - ரஷியா

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலுக்கு ரஷிய அதிபர் புதின் கடும் கண்டனம் தெரிவித்தார். ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நோக்கில் ஈரானின் ராணுவ, அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடந்த ஜூன்... மேலும் பார்க்க

பங்கர் பஸ்டர் வேஸ்ட்.. முன்பே வெளியேற்றப்பட்ட யுரேனியம்: டிரம்ப்புக்கு டஃப் கொடுக்கும் ஈரான்!

அமெரிக்கா, பங்கர் பஸ்டர் குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவதற்கு முன்gபே, ஃபார்டவ் அணுசக்தி மையத்திலிருந்து 400 கிலோ கிராம் யுரேனியத்தை பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டதாக ஈரான் கூறி வரும் நிலையில் அது ப... மேலும் பார்க்க