செய்திகள் :

ஈரானைத் தொடர்ந்து கத்தாருக்கு அச்சுறுத்தலா?

post image

கத்தாரில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் தங்கள் குடிமக்களுக்கு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வருவதால், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், இது பதற்றமான சூழலை பிரதிபலிக்கவில்லை எனவும் கத்தார் அரசு தெரிவித்துள்ளது.

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அதன் நட்பு நாடான கத்தாருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கத்தாரில் இருந்த படைகளையும் அமெரிக்கா திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே கத்தார் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மஜித் அல் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''கத்தாரில் உள்ள வெளிநாட்டினருக்கு அந்நாட்டு தூதரகங்கள் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன. கத்தாரில் பாதுகாப்பான இடங்கள் குறித்தும், பயணங்களை புறக்கணிப்பது குறித்தும் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.

இவை பொதுவான அரசியல் நிர்வாகம் சார்ந்தவை மட்டுமே அன்றி, குறிப்பிடத்தகுந்த அச்சுறுத்தலை பிரதிபலிக்கவில்லை. கத்தாரின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை.

பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், துறை சார்ந்த வல்லுநர்கள், அதிகாரிகள் தொடர்ந்து எல்லைப் பகுதிகளை கண்காணித்து வருகின்றனர். இதனால், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை கத்தாரில் உள்ள அமெரிக்க குடிமக்கள் தங்கள் இடங்களிலேயே தங்குமாறு தூதரகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதோடுமட்டுமின்றி காத்தாரிலுள்ள தோஹாவின் தென்மேற்கே உள்ள இரண்டு ராணுவ தளங்களில் அல் உதெய்த் விமான தளத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 10,000 வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க | ஈரானுடன் போர்: இஸ்ரேலில் இருந்து முதல்கட்டமாக 160 இந்தியர்கள் தாயகம் வருகை!

ஈரானுக்கு உதவத் தயாா்: ரஷியா புதினுடன் அப்பாஸ் அராக்சி சந்திப்பு

மாஸ்கோ: இஸ்ரேலுடனான மோதலில் ஈரானுக்கு உதவத் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்தது. ரஷியாவில் அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதினை, ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி திங்கள்கிழமை சந்தித்துப் பேசிய நி... மேலும் பார்க்க

தண்ணீா் தர மறுத்தால் இந்தியாவுடன் போா்: பிலாவல் புட்டோ

இஸ்லாமாபாத்: சிந்து நதி நீரை இந்தியாவுக்கு தர மறுத்தால் போா் நடத்தப்படும் என்று ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், அந்நாட்டு முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் பு... மேலும் பார்க்க

ரஷிய தாக்குதல்: உக்ரைனில் 10 போ் உயிரிழப்பு

கீவ்: உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது: உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ஞாய... மேலும் பார்க்க

‘செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பிடம் தெரியாது’

வாஷிங்டன்: ஈரான் அணுசக்தி மையங்களைத் தாக்கி நிா்மூலமாக்கிவிட்டதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறினாலும், அந்த நாடு 60 சதவீதம் வரை செறிவூட்டி வைத்திருக்கும் சுமாா் 400 கிலோ யுரேனியம் எங்கு இருக்க... மேலும் பார்க்க

அமெரிக்கா மீதான தாக்குதல்! ஈரானுக்கு டிரம்ப் நன்றி!

அமெரிக்க ராணுவத் தளத்தின் மீதான தாக்குதல் குறித்த முன்னறிவிப்புக்காக ஈரானுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அமெரிக்கா த... மேலும் பார்க்க

கத்தாா், இராக்கில் அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

துபை: கத்தாா், இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் திங்கள்கிழமை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஈரானில் உள்ள அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி... மேலும் பார்க்க