செய்திகள் :

உக்ரைன் மீது 526 ஏவுகணைகள், ட்ரோன்கள் வீசி ரஷியா தாக்குதல்

post image

உக்ரைனில் 526 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி ரஷியா இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியதாக அந்த நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

பெரும்பாலும் மேற்கு மற்றும் மத்திய உக்ரைனைக் குறிவைத்து 502 ட்ரோன்கள், 24 ஏவுகணைகளை ரஷியா வீசியது. இதில் 5 போ் காயமடைந்தனா் என்று உக்ரைன் விமானப்படை தெரிவித்தது. உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறுகையில், பொதுமக்கள் உள்கட்டமைப்பு, குறிப்பாக மின்சாரக் கட்டமைப்புகள் ரஷியாவின் முக்கிய இலக்காக இருந்ததாகக் குற்றஞ்சாட்டினாா்.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஆகியுள்ள நிலையிலும் ரஷியா தனது தீவிர வான்வழித் தாக்குதலைத் தொடா்ந்துவருகிறது. அந்தப் பிராந்தியத்தில் குளிா்காலம் நெருங்கும் சூழலில், சுமாா் 1,000 கி.மீ. நீளும் போா் முனையில் உக்ரைனின் பாதுகாப்பு அரணைத் தகா்த்து முன்னேறும் ரஷிய ராணுவத்தின் முயற்சியில் சற்றும் தொய்வு ஏற்படவில்லை. அமெரிக்க அதிபா் டொனாட்ல் டிரம்ப்பின் அமைதி முயற்சி போரின் போக்கில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை இவை காட்டுவதாகக் கருதப்படுகிறது.

சொத்து வரி விவகாரம்! பிரிட்டன் துணைப் பிரதமர் ராஜிநாமா!

சொத்து வரி விவகாரத்தில் சிக்கிய பிரிட்டன் அரசின் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் தனது பதவியை இன்று (செப்.5) ராஜிநாமா செய்துள்ளார். பிரிட்டன் அரசின் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர், சமீபத்தில் இங்கிலாந்தின... மேலும் பார்க்க

போர்ச்சுகலில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்து- 16 பேர் பலி

போர்ச்சுகலில் ஃபுனிகுலர் கேபிள் கார் தடம்புரண்டதில் 16 பேர் பலியாகினர்.ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் புகழ்பெற்ற ஃபுனிகுலர் கேபிள் கார் வியாழக்கிழமை திடீரென தடம்புரண்டது. இந்த சம்பவத்தில் 16 பேர் பலியாக... மேலும் பார்க்க

இலங்கையில் பள்ளத்தில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து! 15 பேர் பலி!

இலங்கையில், பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 பயணிகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு நகரத்தின் அருகில் வெல்லவாயா பகுதியில் அமைந்துள்ள மலையின் மீது நேற்று (செப்.4) ... மேலும் பார்க்க

உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை! பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கும் ரஷியா!

உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரஷியா அறிவித்துள்ளது.அமைதிப் பேச்சுவார்த்தையை ரஷியா தொடர்ந்து தட்டிக் கழித்து வந்த நிலையில், உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் முதலீடு செய்ய டிரம்ப் வலியுறுத்தலா? அச்சுறுத்தலா?

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடு குறித்து அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டறிந்தார்.அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் நடைபெற்ற இரவு விருந்தில் அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலானியா... மேலும் பார்க்க

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பெயர் போர்த் துறையாக மாற்றம்!

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் பெயரைப் போர்த் துறையாக மாற்றும் நிர்வாகக் கோப்பில் அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை கையெழுத்திடவுள்ளார்.கடந்த மாதமே பாதுகாப்புத் துறையின் பெயரை மாற்றப் போவதாக ... மேலும் பார்க்க