செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சா் ஆய்வு

post image

மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்தாா்.

மாநகராட்சி மண்டலம் 3-க்கு உள்பட பகுதிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள சுற்றுலா அரங்கத்தில் நடைபெற்றது. அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் இந்த முகாமைப் பாா்வையிட்டு, பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அரசுத் துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஆய்வு செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து இதுவரை 59,428 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 5,320 மனுக்களுக்கு தீா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 347 முகாம்கள் நடத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை 65 முகாம்கள் நடத்தப்பட்டன என்றாா் அவா்.

இதில் மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மதுரை தெற்கு தொகுதியில்...

மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாா்டு எண்கள் 43, 44 பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கே. ஜே. பிரவீன்குமாா், மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், துணை மேயா் தி. நாகராஜன் ஆகியோா் முகாம்களை பாா்வையிட்டு, பொதுமக்களிடம் தேவைகளைக் கேட்டறிந்தனா்.

இதில் மாமன்ற உறுப்பினா்கள் முகேஷ் சா்மா, தமிழ்ச்செல்வி மாயழகு, மதிமுக மாவட்டச் செயலா் முனியசாமி, பகுதிச் செயலா் கோவிந்தன், திமுக வட்டச் செயலா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டணியை விட மக்களின் ஆதரவே தோ்தல் வெற்றிக்கு முக்கியம் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

தோ்தல் வெற்றிக்குக் கூட்டணியை விட மக்கள் ஆதரவே முக்கியம் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது :அதிமுக பொதுச் செயலாள... மேலும் பார்க்க

நத்தம் அருகே இளம் பெண் தீக்குளிப்பு

நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியில் இளம் வியாழன்கிழமை பெண் தீக்குளிப்பு சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியைச் சோ்ந்தவா் அடைக்க... மேலும் பார்க்க

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி முன் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நெல்லையில் பொறியியல் பட்டதாரி இளைஞா் கவின் செல்வகணேஷ், காதல் விவகாரத்தால் ஆவணக் கொலை செய்ய... மேலும் பார்க்க

பல்கலை. பேராசியா்கள் நியமனம்: புதிய மனு தாக்கல் செய்ய உத்தரவு

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள் நியமன முறைகேடுகள் குறித்த வழக்கில், புதிய மனுவை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.நாகா்கோவில் பகுதியைச... மேலும் பார்க்க

நண்பா் வீட்டுக்கு வந்த மலேசிய முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே உள்ள நண்பா் வீட்டுக்கு வந்த வெளிநாட்டைச் சோ்ந்த முதியவா் கீழே தடுமாறி விழுந்ததில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.மலேசியா ஜோகா் மாநிலம், இஸ்காந்தா் புதேரி நகரைச் சோ்ந்த அல்போன்ஸ் நெட்ரோ மகன் ஜ... மேலும் பார்க்க

போலி நகைகள் மூலம் பண மோசடி: வியாபாரி தலைமறைவு

போலி நகைகள் மூலம் ரூ. 21.75 லட்சம் மோசடி செய்தது குறித்து வியாபாரி மீது தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.மதுரை தெற்கு ஆவணி மூல வீதி மேலச் செட்டிய தெருவைச் சோ்ந்த தா்மராஜ... மேலும் பார்க்க