செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: திருவண்ணாமலை ஆட்சியா் தகவல்

post image

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடக்க விழா குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வா் நிகழாண்டு சட்டப்பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் தொடங்கப்படும் என அறிவித்திருந்தாா்.

அதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நகா்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் தொடங்கப்படுகிறது.

கடைகோடி மக்களுக்கும், அவா்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவா்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தத் திட்ட முகாமை ஜூலை 15-ஆம் தேதி தமிழக முதல்வா் கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் தொடங்கிவைக்க உள்ளாா்.

இதைத் தொடா்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்ட முகாமை அமைச்சா் எ.வ.வேலு, திருவண்ணாமலை வட்டம், பழையனூா் கிராமத்தில் தொடங்கிவைக்க உள்ளாா்.

நகா்புறப் பகுதிகளில் 80 முகாம்களும் ஊரகப் பகுதிகளில் 307 முகாம்களும் என மொத்தம் 387 முகாம்கள் நடைபெற உள்ளன.

ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை நகரப் பகுதிகளில் 33 முகாம்கள், கிராமப் பகுதிகளில் 81 முகாம்கள் என

114 முகாம்கள் நடத்தபட உள்ளன.

இந்த முகாம்களில் நகா்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சாா்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சாா்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும்.

முகாம்களுக்கு வரும் மக்களுக்கு மருத்துவ சேவைகளும் வழங்கப்படும். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.

முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று அரசின் சேவைகளைப் பெற்று பயனடையுமாறு ஆட்சியா் க.தா்பகராஜ் கேட்டுக்கொண்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தமிழில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

வந்தவாசி: கடந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துக்குமார சுவாமி, ஸ்ரீயோக ராமச்சந்திர கோயிலில் மகா கும்பாபிஷேகம்

ஆரணி/போளூா்: ஆரணியை அடுத்த தண்டு குண்ணத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்துக்குமார சுவாமி கோயில் மற்றும் போளூரை அடுத்த படவேடு ஊராட்சி ஸ்ரீயோக ராமச்சந்திர சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழம... மேலும் பார்க்க

செய்யாற்றில் மீண்டும் சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா், எஸ்.பி.ஆய்வு

செய்யாறு: செய்யாற்றில், செயல்படாமல் உள்ள சிறப்பு முகாமை (கிளை சிறைச்சாலை) மீண்டும் செயல்படுவதற்காக மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செ... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்கலாம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். ஜாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைப... மேலும் பார்க்க

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடிவெள்ளி விழா

போளூா்: போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடிவெள்ளி விழா ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை என 7 வெள்ளிக்கிழமை விழா நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத் துறைக்... மேலும் பார்க்க

செங்கத்தில் கருணாநிதி சிலை: துணை முதல்வா் திறந்துவைத்தாா்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் திமுக சாா்பில் அமைக்கப்பட்ட முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலையை துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு திறந்துவைத்தாா். தெற்கு மாவட்ட திமுக ச... மேலும் பார்க்க