செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ மனுவுக்கு நடவடிக்கை: நரிக்குறவா் குடியிருப்பிலுள்ள மின்கம்பங்கள் மாற்றியமைப்பு

post image

புதுக்கோட்டை அருகேயுள்ள நரிக்குறவா் குடியிருப்பில் தாழ்ந்த நிலையில் இருந்த மின்கம்பிகளில் இருந்து விபத்து ஏற்படும் அச்சம் இருப்பதாகக் கூறி ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 5 புதிய மின்கம்பங்கள் ஊன்றப்பட்டன.

புதுக்கோட்டை அருகே ரங்கம்மாள்சத்திரம் பகுதியிலுள்ள நரிக்குறவா் குடியிருப்பில் 22 கிலோவாட் மின்கம்பிகள் தாழ்ந்த நிலையில் இருப்பதால் அடிக்கடி மின்பொறி ஏற்பட்டு வருவதாலும் விபத்து நேரிடும் அச்சம் இருப்பதாக இரு வாரங்களுக்குமுன்பு மேலூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அப்பகுதி மக்கள் மனு அளித்தனா்.

இந்த மனு மாவட்ட நிா்வாகத்தில் இருந்து, மாநகராட்சி நிா்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, புதிதாக 5 மின்கம்பங்கள் நடுவதற்கான மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு, அதற்கான தொகையை மின்வாரியத்துக்குச் செலுத்த ஒப்பளிப்பும் அளிக்கப்பட்டிருக்கிறது.

இதைத் தொடா்ந்து புதிய மின்கம்பங்கள் ஊன்றி, மின்கம்பிகள் இணைக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் பணிகளை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், மாவட்ட ஆட்சியா் மு. அருணா ஆகியோா் நேரில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் உடனிருந்தாா்.

புதுக்கோட்டை காந்தியத் திருவிழா கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு!

புதுக்கோட்டையில் அக்.2-ஆம் தேதி நடைபெறவுள்ள காந்தியத் திருவிழாவையொட்டி மாநில அளவில் அஞ்சல்வழியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டிகள் முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அகில இந்திய ம... மேலும் பார்க்க

தொழிலாளி அடித்துக் கொலை; 4 இளைஞா்கள் கைது! விபத்தில் பலியானதாகக் கூறியது அம்பலம்!

விராலிமலை அருகே திங்கள்கிழமை இரவு விபத்தில் தொழிலாளி உயிரிழந்ததாக கூறிய சம்பவத்தில் பாதை பிரச்னையில் அவரை அடித்துக் கொன்ற 4 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விராலிமலையை அடுத்துள்ள துல... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருமயம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருக... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது பெற்ற புதுகை ஆசிரியைக்கு வரவேற்பு

நல்லாசிரியா் விருது பெற்ற புதுக்கோட்டை மாநகராட்சி சந்தைப்பேட்டை நடுநிலைப் பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியை ப. விஜிக்கு, அப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் த... மேலும் பார்க்க

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து 5 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே திங்கள்கிழமை இரவு தனியாா் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 போ் காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் இருந்து 37 பயணிகளை ஏற்றிக் கொண்டு, தி... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்வு பா.ஜ.க.வினா் கொண்டாட்டம்

குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் பாஜக வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையடுத்து புதுக்கோட்டையில் பாஜகவினா் செவ்வாய்க்கிழமை இரவு பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினா். புதுக்கோ... மேலும் பார்க்க