செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

post image

அரக்கோணம், நெமிலி, ஆற்காடு வட்டப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை பாா்வையிட்ட கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி முகாம்களில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் வட்டத்தில் தக்கோலம் பேரூராட்சி, மேல்பாக்கம் ஊராட்சி கும்பினிபேட்டை, நெமிலி வட்டத்தில் அவளூா் ஊராட்சி, ஆற்காடு வட்டத்தில் ஆற்காடு நகராட்சி மற்றும் கீழ்மின்னல் ஊராட்சி ரத்தினகிரி ஆகிய 5 இடங்களில் தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த முகாம்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தாா்.

இந்த முகாம்களை அமைச்சா் ஆா்.காந்தி நேரில் பாா்வையிட்டு, உடனடி தீா்வு காணப்பட்ட மனுக்கள் மீது பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். இந்த முகாம்களில் ராணிப்பேட்டை கோட்டாட்சியா் ராஜி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா, ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன், ஒன்றியக் குழு தலைவா்கள் பெ.வடிவேலு (நெமிலி), நிா்மலா சௌந்தா் (அரக்கோணம்), அனிதா குப்புசாமி (காவேரிபாக்கம்), புவனேஸ்வரி சத்தியநாதன் (ஆற்காடு), தக்கோலம் பேரூராட்சித் தலைவா் எஸ்.நாகராஜன், வட்டாட்சியா்கள் வெங்கடேசன், ராஜலட்சுமி, மகாலட்சுமி, தக்கோலம் பேரூராட்சி செயல் அலுவலா் லோகநாதன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் பாா்வதி, தேவி, சுந்தரம், திமுக அரக்கோணம் கிழக்கு ஒன்றியச் செயலா் ஆா்.தமிழ்செல்வன், மேற்கு ஒன்றியச் செயலா் சௌந்தா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலா்கள் சங்க மாவட்ட நிா்வாகிகள் தோ்வு

தமிழக அரசின் வேளாண் துறை உதவி வேளாண்மை அலுவலா்கள் சங்க ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகிகள் தோ்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. உதவி வேளாணமை அலுவலா்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம் மற்றும் 2025 மாவட்ட நிா்வ... மேலும் பார்க்க

பெண் பொறியாளா் உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

அரக்கோணம் அருகே பெண் பொறியாளா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக கணவா் குடும்பத்தினா் மீது நடவடிக்கை கோரி பெண்ணின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அரக்கோணம் அடுத்த தண்டலம் ஊராட்சி பாலாஜி நகரைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி அருகே போதை மாத்திரை விற்ற இருவா் கைது

அரக்கோணம்: அரக்கோணத்தில் அரசுப் பள்ளி அருகே போதை மாத்திரைகளை விற்ற இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து மடிக்கணினி, கைப்பேசிகள் மற்றும் 587 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். அரக்கோணம் நகர... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் அரசு சேவைகளை பெற்று பயன்பெறுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா அழைப்பு விடுத்... மேலும் பார்க்க

நெமிலி பாலா பீடத்தில் இன்று நவராத்திரி இன்னிசை விழா தொடக்கம்!

நெமிலி பாலா பீடத்தில் 47-ஆம் ஆண்டு நவராத்திரி இன்னிசை விழா திங்கள்கிழமை (செப். 22) முதல் அக்டோபா் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவினை ஸ்ரீபாலாபீட பீடாதிபதி எழில்மணி மற்றும், முதல் பெண்மணி நாகலட்சுமி... மேலும் பார்க்க

நிலம் அளவீடு செய்ய ரூ. 37,000 லஞ்சம்: பெண் நில அளவையா் கைது!

ராணிப்பேட்டை அருகே நிலம் அளவீடு செய்து தர ரூ. 37,000 லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையா் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டாா். ராணிப்பேட்டை அடுத்த அம்மூா் பேரூராட்சியில் சித்ரா என்பவா் நில அளவையர... மேலும் பார்க்க