செய்திகள் :

`உங்கள் ஆட்சியிலாவது கந்துவட்டிக் கொடுமைக்கு...’ - விஜய்க்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த இளைஞர்

post image

கந்துவட்டிக் கொடுமையால் தூக்குப் போட்டு தற்கொலை

புதுச்சேரி கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 34 வயதான விக்ரம், இறைச்சிக் கடையில் பணிபுரிந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு மினி லாரி ஒன்றை வாங்கிய விக்ரம், அதற்காக பலரிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளான விக்ரமால், சரியாக வேலைக்கு செல்ல முடியவில்லை. அதனால் மினி லாரிக்காக கடன் வாங்கியவர்களுக்கு அவரால் சரியாக வட்டி செலுத்த முடியவில்லை. அதனால் அவருக்கு கடன் கொடுத்தவர்கள் வட்டியையும், அசலையும் திருப்பிக் கேட்டிருக்கின்றனர்.

தற்கொலை கடிதம்

அவரால் கடனை கொடுக்க முடியவில்லை என்பதால், கடன்காரர்கள் மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் மனமுடைந்த விக்ரம், நேற்று முன் தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது தற்கொலைக்கு முன்பு அவர் தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், `தனசேகர் என்பவரிடம் நான் 10 பைசா வட்டிக்கு பல்வேறு தவணைகளில் ரூ.3,80,000 பணம் வாங்கினேன். அதற்கு ஒவ்வொரு மாதமும் ரூ.38,000 சரியாக வட்டி செலுத்தி வந்தேன். மூன்று மாதங்களுக்கு முன்பு நான் விபத்தில் விழுந்ததில் இருந்து என்னால் வட்டி செலுத்த முடியவில்லை.

`வட்டி கொடுக்கும் வரை உன் மனைவியையும், பெண்ணையும் என்னிடம் விடு...’

அதனால் தனசேகர் என் மனைவியைப் பற்றி தவறாகப் பேசி வந்தான். `நீ வட்டி கொடுக்கும் வரை உன் மனைவியையும், உன் பெண்ணையும் என்னிடம் விடு’ என்று பேசி மிரட்டினான். அதனால் நான் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானேன். நான் உயிரோடு இருந்தால் இவனை ஒன்றும் செய்ய முடியாது. அதனால் நான் தற்கொலை செய்தால் பிறகு அரசு இவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதற்கான அனைத்து ஆடியோக்களும் என் வாட்ஸ்-அப்பில் இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார். அதேபோல, `த.வெ.க தலைவர் விஜய் அண்ணாவுக்கு, 10%, 15% என்று கந்துவட்டிக்கு விட்டு சித்ரவதை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனிமேல் வரவிருக்கும் உங்கள் ஆட்சியிலாவது இப்படி கந்துவட்டிக்கு விடுபவர்கள் பயப்பட வேண்டும். என் மனைவி  மற்றும் குழந்தைகளின் படிப்புக்கும், வாழ்க்கைக்கும் நீங்கள் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். அதையடுத்து, `அரசுக்கு ஒரு வேண்டுகோள். நான் இறந்தபிறகு என் உடல் உறுப்பை எடுத்து அதன்மூலம் என் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தென்காசி: மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை; 6 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது!

தென்காசி, கேரளா மாநிலத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லையோர மாவட்ட பகுதிகளுக்கு பேருந்து வசதிகள் அதிகமாக இருக்கிறது. இதனால் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு அதிகப்படி... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: த.வா.க கட்சி மாவட்ட செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை - பழிக்குப் பழியா... போலீஸ் விசாரணை!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் மணிமாறன். இவர் மயிலாடுதுறையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் காரைக்காலுக்கு சென்றுள்ளார். மயிலாடுதுறை அருகே உள்ள செ... மேலும் பார்க்க

கடலூர்: `காதலன் கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்!’ - கணவருக்கு கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண் காவலர்

கடலூரைச் சேர்ந்த சோனியா சென்னை ஆவடி ஆயுதப் படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்தார். அப்போது இவருக்கும், அங்கு கார் ஓட்டுநராகப் பணியாற்றிய கடலூரைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக ம... மேலும் பார்க்க

திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு: தலைமறைவான மாமியார் சித்ராதேவி கைது

திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபுதூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயசுதா. மகள் ரிதன்யா (27).ரிதன்யாவுக்கும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி... மேலும் பார்க்க

``மேகாலயா சம்பவத்தை போல செய்தேன்..'' - திருமணமாகி 45 நாளில் கணவனை கொன்ற பெண் அதிர்ச்சி வாக்குமூலம்

மேகாலயாவில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராஜா ரகுவன்சி என்பவரை அவரது மனைவி தேனிலவுக்கு அழைத்துச் சென்று கூலிப்படையை ஏவி படுகொலை செய்த சம்பவத்தை போன்று பீகாரில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மேகாலயா சம்பவத... மேலும் பார்க்க

சென்னை: காலையில் திருமணம் மாலையில் மாயம்; மணமகளைத் தேடும் குடும்பம்; என்ன நடந்தது?

சென்னை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் நாகவள்ளி. இவர் திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் 2.7.2025-ம் தேதி கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, "என் கணவர் பெயின்டிங் வேலை செய்து வருகிறார். என்னுடைய மகள் அர்ச்... மேலும் பார்க்க