கலைவாணா் அரங்க வளாகத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை: தமிழக அரசு அறிவிப்பு
உங்க எளிமையை பார்த்து ஊரார் கேலி பேசினார்களே அப்பா! - மகளின் மடல் |#உறவின்கடிதம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
அப்பா என்றதும் உங்களின் ஓங்கி உயர்ந்த நெடிய உருவம், கம்பீரத் தோற்றம் வேகமான மிடுக்கான நடை இதுதான் என் நினைவிற்கு வருகிறது அப்பா. என் வாழ்வில் உங்களைப்போன்ற கம்பீரமான நடையை நடந்து யாரையும் நான் பார்த்ததில்லை.
நீங்கள் தாசில்தாராக வேலை பார்த்தாலும் எளிய வாழ்க்கைதானே வாழ்ந்தீர்கள். நீங்கள் இறந்தபோது இறப்புக்கு வந்தவர்கள் எல்லோரும் ஒரு தாசில்தார் இந்த வீட்டிலா குடியிருந்தார் என்று கேலி பேசினார்கள். எங்களுக்கு அது கேலி இல்லை உங்களின் பெருமை. லஞ்சம் வாங்காமல் நேர்மையான வாழ்க்கைக்கு அது அடையாளம்.

எங்களுக்கு சிறு வயது முதல் இந்த உலகத்தை, இயற்கையை, பல நாடுகளை, விவரித்து விளக்கி நெஞ்சில் பதிய வைத்தவர் நீங்கள்தானே அப்பா. அக்கா முப்பத்தெட்டு நாடுகளுக்கு சுற்றி வந்தாள் என்றால் அது உங்களால்தானே. உங்கள் பேரன் பேத்தி குடியிருக்கும் கனடாவிற்கும், அமெரிக்காவிற்கும் போய்வந்த பொழுது நீங்கள் உயிருடன் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பீர்கள் அப்பா.
சிறு வயதில் படிப்பு என்றால் அடி வெளுத்து விடுவீர்கள். ஒரு முறை நான் எக்கனாமிக்ஸ் இல் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தபோது நீங்கள் என்னிடம் பேசவேயில்லையே அப்பா. உங்கள் பிள்ளைகள் ஆறு பேரும் அரசு உத்தியோகத்தில் வேலை பார்த்தது நீங்கள் பட்ட கஷ்டத்தினால்தானே. எங்களை படிக்க வைக்க எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பீர்கள்.? அம்மாவின் தாலியை அடகு வைத்து எல்லாம் கல்விக்காக செலவு செய்தீர்களே அப்பா. யாருக்கு அந்த மனசு வரும்?

வாழ்க்கையில் பல மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னீர்கள். அதுபோல அக்கா ரஷ்ய மொழியும், தம்பி பிரெஞ்சும், நான் தமிழ்,ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி மலையாளம் எல்லாம் எழுதப் படிக்கப் பேசிக் கற்றுக்கொண்டோம்.
மாலையில் வீட்டின் முன்னே ஈஸிசேர் போட்டு உட்கார்ந்திருப்பீர்கள். உங்களை சுற்றி நாங்கள் ஆறுபேரும் உட்கார்ந்திருப்போம். நீங்கள் கண்கள் விரிய, முகத்தில் அத்தனை சந்தோஷத்துடனும் கம்யூனிசம் பற்றியும் மார்க்ஸ் பற்றியும் விவரிப்பீர்கள். காவல்துறை பற்றியும், சட்டங்கள் பற்றியும் விவரித்ததை திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருப்போம். அம்மா சாப்பிட வாருங்கள் என்று அழைத்தாலும் போகமாட்டோம் அந்த இனிமையான நாட்கள் இனி வருமா அப்பா. இதை எழுதும்போது என் கண்கள் பணிக்கின்றன.
நீங்கள்தான் எங்களுக்கு முன் மாதிரி. என்னுடைய பேரன் பேத்திகளுக்கு இப்போதும் நான் உங்களைப்போல கதைகள் பல சொல்கிறேன். நாட்டு நடப்பை விவரிக்கின்றேன். என் காலத்திற்குப்பிறகு அவர்களும் என்னை நினைத்துப் பெருமிதப்படா வேண்டும். இதுதான் ஆசை.
- சரோஜா பாலசுப்ரமணியன்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.