டேபிள் நிறைய டேட்டாக்கள்...மந்திரிகளால் ஷாக்கான Stalin! | Elangovan Explains
உங்க வலியை என் பட்டம் போக்கிருச்சா? - பெற்றோருக்கு மகனின் உருக்கமான மடல் | #உறவின்கடிதம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
‘என் அன்பு அப்பா’ விவரம் தெரிந்த நாள் முதல் உன் கை விரல்களில் என்னை பிடித்து இவ்உலகை அறிமுகப்படுத்தியதை விடவும் உன் சைக்கிளில் ஏற்றி என்னை ‘உலகம் சுற்றும் வாலிபனாக’ மாற்றியது நீங்கள் தான், உலகமயாக்கலின் விளம்பரத்தாள் 1ஆம் வகுப்பு படிக்கும்போது தொலைக்காட்ச்சியில் நான் பார்த்து கேட்ட ‘ஸ்ட்ராபெரி’ பழத்தை .
“ஆரஞ்சு, ஆப்பிள், கொய்யா, மாதுளை” மற்றும் பல பழங்கள் கூட்டுக்குடும்பங்கள் எங்கும் சிதர துவங்கிய காலத்திலே பல ‘பழமுதிர்சோலைகளில்’ கூட்டுகுடும்பமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் பழங்களிலும் ‘ஸ்ட்ராபெரி’ பழம் கிடைக்காததால், ‘என் அப்பா’ நீ எனக்காக ‘ஊட்டி’ சென்று வாங்கி கொடுத்தீர் .
பள்ளிவயதில் ‘ஸ்ட்ராபெரி’ பழத்தை சாப்பிட்டு மகிழ்ந்த எனக்கு 27வயதில் ‘என் அப்பா’ உங்களை அலைய வைத்தது எனக்கு பெரும் கசப்பை தருகிறது , நீங்கள் ‘ஸ்ட்ராபெரி’ பழத்தின் கசப்பு என்று நினைக்க வேண்டாம் , நான் உங்களை என் சந்தோசத்திற்க்காக அலைய விட்ட வடு இப்போது என் மனதில் கசக்கிறது , என்னை மன்னிப்பாயா ‘என் அப்பா’ ..

அம்மாவின் மடி :
அம்மா எனக்கு 3வயது இருக்கும் போதே உறவினர் வீட்டில் என்னை விட்டு விட்டு வேலைக்கு சென்றீர்கள் நீங்கள். மாலை பல சிற்றுண்டிகள் வாங்கி வந்தாலும் நீங்கள் என்னை தூக்கி கொஞ்சும் அந்த அரவனைப்பே ஆயிரம் தென்னை மரக்காத்துக்கு சமம் எனக்கு.
எனக்கு உங்களிடம் கிடைத்த முழு அன்பு 5ஆம் வகுப்பில் காலை டீவிஎஸ்50ல் விட்டு காயம் அடைந்து இருந்த போது உங்கள் தனியார் வேலையை விட்டு விட்டு என்னை 2மாதம் பார்த்துக்கொண்டீர் , காயம் ஆரிய பின்னும் இன்னமும் சில நாட்கள் காயம் இன்று வரைக்கும் ஆரமேலேயே இருந்திருக்கிலாம் என்று தோன்றியது உன் அரவனைப்பை மடியில் தூங்கிய நாட்களை இன்றுவரைக்கும் பெற்றிருக்க.

“வீடியோ கேம் அப்பா” :
‘என்அப்பா’ நான் உங்களிடம் 4-5 வயதில் மரங்களில் பல இலைகள், பழ பூக்கள் பல சேர்ந்துதான் இருக்கிறது நான் மட்டும் ஏன் ஒரு பையனாக உங்களுக்கு இருக்கிறேன் என்று கேட்டு இருக்கிறேன். நாம் அப்போது வசித்த காம்ப்பவ்ன்ட் வீட்டில் பல வீடுகலில் அண்னன்-தம்பி , அக்கா-தம்பி, என்று ஒரு வீட்டில் இருந்து இரண்டு குழந்தைகள் வருவார்கள் விளையாட , ஆனால் நான் மட்டும் தனியாக நம் வீட்டில் இருந்து போவேன் விளையாட .
அப்போது ‘கோகுல்’ என்று என்னோடு விளையாட வரும் பையன் அவன் தங்கை ‘மஹா’வோடு விளையாட வருவான் ‘கோகுலின்’ குடும்பத்தோடு நமக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது, ஒரு நாள் நான் விளையாட ‘கோகுல்’ வீட்டுக்கு சென்ற போது ‘கோகுலின்’ அம்மா என்னிடம் ‘’நீ ‘மஹா’ கூட நல்லா விளையாடுற உனக்கும் தம்பியோ, தங்கச்சி பாப்பாவோ வேனுமுன்னு உங்க அப்பா – அம்மாகிட்ட கேளு” என்று என் மனதில் தனிமை தீயை போக்க முதல் கைப்பிடி தண்ணீரை கொஞ்சம் சொட்டியவள் ‘கோகுலின்’ அம்மா.
நான் அதை உங்களிடம் கேட்ட போது நீங்களும்-அம்மாவும் சிரிக்க மட்டும் செய்தீர் ஆனால் அப்போது எனக்கு ‘தம்பியையோ,தங்கையையோ’ நீங்கள் தரவில்லை. அதன் பின் பல வீடுகள் மாற்றம் செய்தோம் நாம். 13 வயது இருக்கும் எனக்கு ‘வீடியோ கேம்’ தனிமை போக்கியாக வந்தது . ஆனாலும் இருவர் சேர்ந்து விளையாடும் விளையாட்டுக்களில் அப்போதும் நான் தனிமை செய்யப்பட்டேன். ‘என் அப்பா’ அவ்வப்போது நீங்கள் ‘வீடியோ கேமில்’ 2ஆவாது ஆளாக என்னோடு விளையாடி தோற்று நான் விளையாட்டில் ஜெயித்ததை நீங்கள் என் வாழ்வில் நான் ஜெயித்து விட்டதாக மகிழ்ச்சி அடைந்தீர் .

இராமானுஜன் – ஐன்ஸ்டைன் ஆக என்னை நினைத்த அம்மா :
கல்வி எல்லா வாழ்க்கையிலும் வெளிச்சம் தரும், என் அம்மாவிற்க்கும் வெளிச்சம் தந்தது கல்வி பயிலும் போதே மின்சார பணம் கட்ட இயலாத நிலையில் என் அம்மா தெரு விளக்கின் வெளிச்சத்தில் படித்து முதல் பட்டதாரி ஆக வந்தவர் ‘என் அம்மா’. ஆனால் என்னால் a2+2ab, மற்றும் e=mc போன்றவை மனதில் உதயமாகவில்லை . உணவில் கூட முட்டை எடுத்துக்கொள்ளாத என்னை கணக்கில் இராமானுஜன் ஆக நினைத்தது என் தவறல்ல. மன்னித்து விடுங்கள் அம்மா..
பொதுத்தேர்வு முடிவு என் அப்பாவின் கனவு பட்டம் :
என் +2 இறுதித்தேர்வு முடிவுகள் நல்ல நிகழ்வாக அமைந்தது உங்களுக்கு அப்பா. நான் பல தடவை கடையில் இருக்கும் போது பார்த்திருக்கிறேன் நீங்கள் குழந்தைகளுக்கு அளவு எடுக்கும் போது கட்சிதமாக எடுப்பீர் அவர்களுக்கு யூனிஃபார்மை நேர்த்தியாக தைப்பீர் ‘ஸ்கூள் டெய்லர்’ என்று பலரும் பாராட்டுவர் உங்களை .

யூனிஃபார்ம் போட்டு பள்ளிக்கு சாக் பீஸ் பிடிக்க வேண்டிய வயதில் துனி கடையில் ஊசியை பிடித்து பட்டன் வைத்தது எனக்கு தெரியும் , நீங்கள் ஊசியைக்கொண்டு பட்டன் வைக்கும் போது பல தடவை கைகளில் குத்தி இருப்பீர் அந்த வலி எனது +2 பொது தேர்வு முடிவுகள் மற்றும் எனது கல்லூரி பட்டம் போக்கியிருக்கும்.
என் வெளியூர் நாட்களில் என் அப்பா-அம்மா :
கால் நூற்றாண்டை கடந்த பின் என் வாழ்வில் என் அப்பா-அம்மாவை பிரிந்து சென்னையில் வேலைகிடைத்து வந்தேன். பள்ளி – கல்லூரி பிறந்த ஊரிலே முடித்தாயிற்று வேலை வெளியூரில் தான் கிடைத்தது. காலை, மதியம்,இரவு என்று மூன்று நேரமும் தொலைப்பேசியில் அடுப்பில்லாமலே “இட்லி சாப்டியா, சாப்பாடு சாப்டியா, நைட்டு பழம் சாப்ட்டு தூங்கு” என்று என் அப்பா-அம்மா இருவரும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு நலம் விசாரிப்பர்.
தனிமை உணர்வோடு வளர்ந்த எனக்கும் என் அப்பா-அம்மாவை விட்டு வெளியூர் வேலையில் பெரும் துயரம் தந்தது.யாரோ ஒருவரை அண்னாவாக ,அக்காவாக நினைத்து பழகி ஆறுதல் அடையலாம் ஆனால் என் அப்பா-அம்மா மட்டும்தான் என் அப்பா-அம்மாவாக முடியும்.
வெளியூரில்
எத்தனையோ
நபர்களின் தொலைப்பேசி
அழைப்பை பார்த்திருக்கிறேன்,
‘பிரோ,டியூட்,டியர்,கெட்ட வார்த்தைகளில்’
பதிவு செய்யப்பட்டு இருக்கும்,
ஆனால்
இரு உறவின் தொலைபேசி எண்கள்
வெவ்வேறாக இருப்பினும்
அந்த எண்களை
‘அப்பா-அம்மா’ என்றே பதிவு
செய்து வைத்திருக்கின்றனர்
அப்பா-அம்மாவை .

அப்பா ,அம்மா இருவருக்கும் என் வேண்டுகோள் :
27 வயதாகும் என்னை நீங்கள் ‘என் அப்பா’ உங்கள் சைக்கிளில் தூக்கி சுமந்து கொண்டுதான் இருக்கிறீர் அது எனக்கும் தெரியும். நீங்கள் எனக்கு இப்போது திருமணம் செய்யா முயற்சிக்கிறீர் ஆனால் எனக்கு இப்போது உடன்பாடில்லை திருமணத்தில் உங்கள் இளமை புகைப்படத்தை பார்க்கும்போதெல்லாம் எனக்கு இப்போது இருக்கும் என் முகம் அப்படியே இருக்கிறது உங்கள் இளமை முகம் போல.
நம் சொந்தங்கள் எங்கு நாம் இருவரும் சேர்ந்து சென்றாலும், என் அம்மாவிடம் “தேவி”, உன் பையன் ‘சூரியா’ அப்படியே ‘பழனிச்சாமி’ உருச்சு வெச்சுருக்கான் “ என்று பலரும் இன்று வரை கூறுகின்றனர் , அப்போது அம்மாவின் முகம் வாடும் லேசாக. திருமண உறவில் தோன்றும் என் பிள்ளை வந்தாள் நீங்களும் , அம்மாவும் தாத்தா-பாட்டி ஆகி விடுவீர் , இப்போது கனவுகளோடு ஓடிக்கொண்டு இருப்பவன் நான் தற்காலிகம் என்னை மன்னித்து கொள்ளுங்கள்.
இன்னமும் என் கனவுகளை அடையும் வரை கொஞ்ச நாட்களுக்கு நான் மட்டும் உங்கள் கைகளை பிடித்தபடி நீங்கள் அப்பா-அம்மாவாக இருப்பதையே நான் விரும்பி வேண்டுகோள் வைக்கிறேன் .
அம்மா-அப்பா இந்த கடிதத்தை நான் என் மனசுக்குள்ளேயே ஓட உட்டுட்டு இருக்கன் ரொம்ப நாளா இந்த உணர்வை நான் எழுத்தால் எழுதி கடிதமாகத்தான் உங்களுக்கு தர வேண்டும் என்கிற அவசியம் இல்லை . என்னை எழுதியவர்கள் நீங்கள் என் முக ஜாடை என் நடவடிக்கையிலே நீங்கள் இந்த என் மனக்கடித்ததை படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
விரைவில்
என் மன (க்) கடித்ததிற்க்கு
உங்களிடமிருந்து
(மன) பதில் கடிதத்திற்க்காக
காத்திருக்கும்
உங்கள் பையன்
சூர்யா
