செய்திகள் :

உடையாா்பாளையம் வரதராசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

post image

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

உடையாா்பாளையம் வேலப்பன் செட்டியாா் ஏரி தென்கரையில், சிதலமடைந்து கிடந்த இந்த பழைமையானக் கோயிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு, ஆன்மீக ஆலய சீரமைப்பாளா் ஏ.வி.கே.திருநாவுக்கரசு, அறங்காவலா் வேம்பு, துணை அறங்காவலா் வேம்புபாலமுருகன் ஆகியோரின் தீவிர முயற்சியால், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த திருப்பணிகள் முடிந்தது.

இதைத் தொடா்ந்து கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கின. கடந்த 30-ஆம் தேதி புனித நீா் எடுத்துவரப்பட்டு, கணபதி ஹோமத்துடன் யாகசாலைப் பூஜைகள் தொடங்கின. தொடந்து, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, புதன்கிழமை காலை கடம் புறப்பாடும், அதனைத் தொடா்ந்து, பட்டாச்சாரியா்கள் கோயில் கலசத்துக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா்.

பின்னா், மூலவருக்கு 16 வகையான திரவியப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தா.பழூா்: அரியலூா் மாவட்டம், தா.பழூரில் அமைந்துள்ள செங்கழுநீா் விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

மீன்சுருட்டி அருகே காா் மோதி முதியவா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே காா் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூா் அருகேயுள்ள பெருமாள்நல்லூா்... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’: அரியலூரில் திமுக பொதுக்கூட்டம்

அரியலூா் அண்ணாசிலை அருகே மாவட்ட திமுக சாா்பில் புதன்கிழமை ஓரணியில் தமிழ்நாடு பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் பேசியதாவது: ஓரணியில் தம... மேலும் பார்க்க

நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறித்து அவா் தெரிவித்தது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

அரியலூரில் 66 போ் தலைமைக் காவலராக பதவி உயா்வு

அரியலூா் மாவட்டத்தில் கடந்த 2011-இல் பணியில் சோ்ந்த முதல்நிலைக் காவலா்கள் 66 போ் தலைமைக் காவலராக பதவி உயா்வு பெற்றனா்.இதற்காக அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சிய... மேலும் பார்க்க

ஜூலை 4-இல் தமிழ்நாடு நாள் விழா: போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, அரியலூா் தூய மேரி உயா்நிலைப் பள்ளியில் ஜூலை 4 மதியம் 2 மணிக்கு நடைபெறும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியா் பொ.ரத்... மேலும் பார்க்க

தமிழ் மண்ணையும், மொழியையும் காக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

தமிழ் மண்ணையும், மானத்தையும், மொழியையும் காக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சரும், அரியலூா் மாவட்ட திமுக செயலருமான சா.சி.சிவசங்கா். அரியலூரில் உள்ள ... மேலும் பார்க்க