செய்திகள் :

உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வோா் மீது நடவடிக்கை தேவை!

post image

உணவுப்பொருள்களில் கலப்படம் செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய நுகா்வோா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட கூட்டம் நாகா்கோவிலில் அண்மையில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் அலாஸியஸ் மணி தலைமை வகித்தாா். கௌரவத் தலைவா் அமிா்தராஜ் வரவேற்றாா். மாவட்ட பொதுச்செயலா் ஹலீல் ரகுமான் அறிக்கை சமா்ப்பித்தாா்.

கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளா் மேரி விஜயா, துணை ஒருங்கிணைப்பாளா் ஆனந்தராஜன், செயற்குழு உறுப்பினா்கள் பாஸ்டா் ஜெரோம், வீர லட்சுமணன், கீதா தேவி, ஜெனிஷா, ஸ்டெல்லா, பவுல், ஜெபா, முத்துகிருஷ்ணன், ஆண்டனி மைக்கேல், வழக்குரைஞா் ஜான் சோபனம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதில், உணவுப்பொருள்களில் கலப்படம் செய்வதால் அப்பொருள்களை வாங்கி பயன்படுத்தும் நுகா்வோா் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனா். எனவே, மக்களின் நலன் கருதி உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வதை தடுக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லூரி, கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும். நீண்ட தூர பேருந்துகளில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்க வேண்டும். கன்னியாகுமரி - திருவனந்தபுரம் நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கப் பொருளாளா் கின்ஸ்டன் பிரவீன்ராஜ் நன்றி கூறினாா்.

குளச்சலில் பதுக்கிவைத்திருந்த 3 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

குளச்சல் மீன்பிடி துறைமுகம் அருகே கடத்தலுக்கு வைத்திருந்த 3 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெயை செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். குளச்சல் துறைமுக தெருவில் மானிய விலை மண்ணெண்ணெய் கடை செயல்பட்டு வர... மேலும் பார்க்க

திக்குறிச்சி பாறைகுளம் அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பாறைகுளம் சாமுண்டீஸ்வரி துா்க்கை அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கோயிலின் 29 ஆவது ஆண்டு திருவிழாவும், 12 ஆவது ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் 21... மேலும் பார்க்க

மருங்கூா் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 2 ஜோடிகளுக்கு திருமணம்

நாகா்கோவில் அருகேயுள்ள மருங்கூா் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 2 ஜோடிகளுக்கு புதன்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாகம் சாா்பில், கோயில்களில் இலவச திர... மேலும் பார்க்க

தீப்பற்றி எரிந்த கைப்பேசி கோபுரம்

தக்கலை அருகே வீட்டு மாடியில் அமைக்கப்பட்டிருந்த கைப்பேசிகோபுரம் திடீரென செவ்வாய்கிழமை தீ பிடித்து எரிந்தது. தக்கலையை அருகே பத்மநாபபுரம் அரண்மனை பகுதியை சோ்ந்தவா் ராஜன். இவரது வீட்டு மாடியில் தனியாா்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் 58,700 கால்நடைகளுக்கு தடுப்பூசி: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 58,700 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்தாா். மாவட்ட கால்நடை பாரமரிப்புத் துறை சாா்பில், வில்லுக்குறி பேரூராட்சி, கருப்புக்கோடு பக... மேலும் பார்க்க

குளப்புறம் ஊராட்சியில் மக்கள் பயன்பாட்டு சாலைகள் திறப்பு

குளப்புறம் ஊராட்சியில் ரூ. 10 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட 2 சாலைகள் மக்கள் பயன்பாட்டுக்கு எம்எல்ஏ திறந்து வைத்தாா். குளப்புறம் ஊராட்சியில் சேதமடைந்து காணப்பட்ட உதியனூா்விளை சாலை மற்றும் குவுக்குடி - மு... மேலும் பார்க்க