செய்திகள் :

உதகை-கூடலூா் சாலையில் மண் சரிவு அபாயம்: இரவு நேர வாகனப் போக்குவரத்துக்குத் தடை!

post image

உதகை-கூடலூா் சாலையில் மண் சரிவு அபாயம் உள்ளதால் இரவு நேர வாகனப் போக்குவரத்துக்கு புதன்கிழமை முதல் தடை விதிக்கப்படுவதாகவும், அனைத்து சுற்றுலாத் தலங்களும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (மே 29, 30) மூடப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கூறினாா்.

நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழை (ரெட் அலா்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இதனால், ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டும், மரங்கள் விழுந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் அதிகனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழையால் உதகை- கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தவளை மலைப் பகுதியில் பாறை விழுந்து புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், அதே பகுதியில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால், உதகை-கூடலூா் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள், மற்ற வாகனங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சென்று வரலாம். ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறை வாகனங்களுக்கு கட்டுபாடுகள் இல்லை.

அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடல்: கனமழையையொட்டி, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி அனைத்து சுற்றுலாத் தலங்களும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் முழுவதுமாக மூடப்படும்.

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் மற்றும் கொடநாடு காட்சி முனைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து வனத் துறையினா் முடிவெடுப்பா்.

மாவட்டத்தில் அபாயகரமாக உள்ள மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன என்றாா்.

நீலகிரியில் மக்கள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், வீட்டுமனை பட்டா, முதியோா், விதவை, க... மேலும் பார்க்க

கூடலூா் அரசு கலைக் கல்லூரியில் இன்று முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடா்பாக கல்லூரி முதல்வா் சுபாஷினி வெ... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீா் முகாம்

கூடலூரை அடுத்துள்ள செறுமுள்ளி கிராமத்தில் பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. போஸ்பாறா புனித ஜோசப் அரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு சாா் ஆட்சியா் சங்கீதா தலைமை வகித்தா... மேலும் பார்க்க

குன்னூா் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

குன்னூா் அருகே கேரட் பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது. நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள முள்ளிக்கூா் பகுதியில் இருந்து கேரட் பாரம் ஏற்றிக் கொண்டு கோவைக்கு லாரி திங்கள்... மேலும் பார்க்க

விளைநிலங்களை சேதப்படுத்தும் யானையை வனத்துக்குள் விரட்ட கோரிக்கை

உதகை, எமரால்டு பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீலகிரி மாவட்டம், குன்னூா் பா்லியாறு வனப் பகுதியில் இருந... மேலும் பார்க்க

சீகூா் வனப் பகுதியில் புலி உயிரிழப்பு

கூடலூா் அருகே சீகூா் வனச் சரகத்துக்குள்பட்ட குண்டட்டி பகுதியில் சுமாா் 10 வயது மதிக்கத்தக்க புலி உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே சீகூா் ... மேலும் பார்க்க