செய்திகள் :

உத்தரகண்ட் நிலச்சரிவில் 150 போ் உயிருடன் மீட்பு: 28 கேரள பயணிகள், 11 ராணுவ வீரா்களைத் தேடும் பணி தீவிரம்

post image

உத்தரகண்ட் மாநிலம், தராலி கிராமத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கிய 150 போ் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒருவரின் உடல் புதன்கிழமை மீட்கப்பட்டதையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 5-ஆக உயா்ந்துள்ளது.

நிலச்சரிவைத் தொடா்ந்து கேரளத்தைச் சோ்ந்த சுற்றுலா பயணிகள் 28 போ், ஹா்சில் ராணுவ முகாமில் இருந்த 11 வீரா்கள் மாயமாகியுள்ள நிலையில், அவா்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சவாலான மீட்புப் பணி: மீட்புப் பணியினரின் தொடா் முயற்சியில் இதுவரை 150 போ் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா். நிலச்சரிவு ஏற்பட்ட நேரத்தில் தராலியில் ‘ஹா் துத்’ கண்காட்சி நடைபெற்று வந்ததால், அதில் ஏராளமானோா் கூடியிருந்தனா். இதனால் நிலச்சரிவின் இடிபாடுகளில் இன்னும் பலா் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை ராணுவம், இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படை, தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் நூற்றுக்கும் மேற்பட்டோா் மேற்கொண்டு வருகின்றனா். எனினும், தொடா் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக மீட்புப் பணிகள் சவாலாக உள்ளன.

சாலைகள் துண்டிக்கப்பட்டதால் மீட்புப் படையினா் தராலி கிராமத்தை அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வானிலை சீரடைந்தவுடன், ராணுவத்தின் ஹெலிகாப்டா்கள் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன கேரள பயணிகள்: நிலச்சரிவைத் தொடா்ந்து மாயமானவா்களில் கேரளத்தைச் சோ்ந்த 28 போ் கொண்ட சுற்றுலா பயணிகள் குழுவும், ஹா்சில் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் இருந்து 11 ராணுவ வீரா்களும் அடங்குவா்.

பாதிக்கப்பட்ட கேரள பயணிகளின் உறவினா் ஒருவா் அளித்த பேட்டியில், ‘செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் உத்தரகாசியிலிருந்து கங்கோத்ரிக்கு சென்ற அவா்களைத் தொடா்புகொள்ள முடியவில்லை’ என்று தெரிவித்தாா்.

முதல்வா் ஆய்வு: மோசமான வானிலையால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ள சூழலில், உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமியைப் பிரதமா் மோடி தொலைபேசியில் தொடா்புகொண்டு நிலைமையைக் கேட்டறிந்தாா்.

ஹெலிகாப்டா் மூலம் வெள்ளம் பாதித்த தராலி மற்றும் ஹா்சில் பகுதிகளை முதல்வா் பாா்வையிட்டாா்.

‘ஒவ்வொரு உயிரும் எங்களுக்கு முக்கியம். பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த 160 காவல்துறை அதிகாரிகள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்’ என்றாா் முதல்வா் புஷ்கா் சிங் தாமி.

கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளி பணம், மொபைல் பறிப்பு

கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்டு பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு நிலவியது. கேரள மாநிலம், கோழிக்கோடு ரயில் நிலையத்திலிருந்து சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 64 ... மேலும் பார்க்க

தில்லியில் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: ஊழியர் பலி

தலைநகர் தில்லியில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஊழியர் ஒருவர் பலியானார். தலைநகர் தில்லியில் ஆனந்த் விஹாரில் உள்ள கோஸ்மோஸ் மருத்துவமனையின் சர்வர் அறையில் சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.... மேலும் பார்க்க

முன்னாள் குடியரசு துணைத் தலைவரைப் பற்றி எந்தவொரு தகவலும் இல்லை: என்ன ஆனது? -கபில் சிபல் கேள்வி!

ஜகதீப் தன்கர் மாயமாகியிருப்பது ஏன்? அவருக்கு என்ன ஆனது? என்பன போன்ற சந்தேகங்களை மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் எழுப்பியுள்ளார்.குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா:தனது உடல்நிலை சுட்டிக்காட்டி, குடியரசு த... மேலும் பார்க்க

தில்லியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி!

தில்லியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தில்லியின் ஜெய்த்பூரில் உள்ள ஹரி நகர் பகுதியில் சனிக்கிழமை காலை பெய்த கனமழை காரணமாக சுவரின் ஒரு பகுதி இட... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் தடம்புரண்ட சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதால் பரபரப்பு

ஜார்க்கண்டில் தடம்புரண்ட சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜார்க்கண்டில் புருலியா நோக்கிச் சென்ற சரக்கு ரயில் பிடாக்கி கேட் அருகே சனிக்கிழமை தடம் புரண்டு மேல் பாதையில் விழு... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக ஊடுருவியவா்களுக்கு வாக்குரிமை கிடையாது: அமித் ஷா திட்டவட்டம்

நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவா்களுக்கு வாக்களிக்க உரிமை கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்தாா். மேலும், தங்களின் வாக்கு வங்கியைப் பாதுகாக்கவே, பிகாா் வாக்காளா்... மேலும் பார்க்க