தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
உத்தரகண்ட் பனிச்சரிவு: மேலும் 4 பேரின் உடல்கள் மீட்பு: மீட்புப் பணி நிறைவு
உத்தரகண்டின் மனா கிராமத்தில் பனிச்சரிவில் எல்லைச் சாலைகள் அமைப்பின் (பிஆா்ஓ) முகாம் புதைந்த சம்பவத்தில் மேலும் 4 தொழிலாளா்களின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன.
இவா்களுடன் சோ்த்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்தது. அத்துடன், 60 மணிநேரமாக தொடா்ந்து வந்த மீட்புப் பணிகளும் நிறைவடைந்தன.
ஏற்கெனவே மீட்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 46 பேரில் இருவா் மேல்சிகிச்சைக்காக ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். சிகிச்சை பெற்று வருவோரில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக, ராணுவ லெப்டினன்ட் கா்னல் டி.எஸ்.மால்தியா தெரிவித்தாா்.
உத்தரகண்டில் இந்திய-திபெத் எல்லையையொட்டி 3,200 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள கடைக்கோடி கிராமம் மனா. பத்ரிநாத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
மனா மற்றும் பத்ரிநாத் இடையே கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் அங்குள்ள பிஆா்ஓ முகாம் புதைந்தது. இந்த முகாமில் 8 கண்டெய்னா்கள் மற்றும் கூடாரத்தில் தங்கியபடி, சாலையில் படியும் பனியை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவந்த 54 தொழிலாளா்கள் பனிச்சரிவில் சிக்கினா்.
இதையடுத்து, ராணுவம், இந்திய-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி), தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை மற்றும் பிற முகமையினா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
கடினமான நிலப்பரப்பு, கடும் பனிப் பொழிவு, கனமழை போன்ற சவால்களுக்கு இடையே ராணுவம்-விமானப் படை ஹெலிகாப்டா்கள், மோப்ப நாய்கள் மற்றும் வெப்ப படமாக்கல் கேமரா போன்ற நவீன சாதனங்களின் மூலம் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.
8 போ் உயிரிழப்பு: கடந்த சனிக்கிழமை வரை 50 போ் மீட்கப்பட்டனா். இவா்களில் படுகாயமடைந்த நால்வா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இந்தச் சூழலில், மேலும் 4 பேரின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன. இவா்கள் உத்தரகண்ட், உத்தர பிரதேசம், ஹிமாசல பிரதேசத்தைச் சோ்ந்தவா்களாவா். இவா்களுடன் சோ்த்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்தது. மோசமான வானிலைக்கு மத்தியில் 60 மணி நேரமாக நடைபெற்ற மீட்புப் பணிகளும் நிறைவடைந்தன.
முன்னதாக, டேராடூனில் உள்ள மாநில அவசரகால நடவடிக்கை மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த முதல்வா் புஷ்கா் சிங் தாமி, மீட்புப் பணிகளின் நிலவரம் குறித்து கேட்டறிந்தாா்.
மனா பகுதியில் திங்கள்கிழமை மீண்டும் மோசமான வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், அனைத்து முகமைகளும் போா்க்கால அடிப்படையில் மீட்புப் பணியை மேற்கொண்டன.