உத்தரகாண்ட்: வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்; மீட்புப் பணிகள் தீவிரம்!
உத்தரகாண்ட்டில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர், கவுரிகுந்த் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த ஹெலிகாப்டரில் விமானி உட்பட 6 பேர் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விபத்தைத் தொடர்ந்து மீட்பு பணியில் உள்ளூர் நிர்வாகம் மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டிருக்கின்றனர்.

“ஹெலிகாப்டர் விபத்து குறித்து வருத்தமான செய்தி கிடைத்தது. பயணிகளின் பாதுகாப்பிற்காக பிராத்தனை செய்கிறேன்” என்று விபத்து குறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...