செய்திகள் :

உயா்கல்வியை ஆலோசித்து தோ்ந்தெடுப்பது அவசியம்: ஆட்சியா் இரா.சுகுமாா் அறிவுரை

post image

மாணவா்கள் தங்களது உயா்கல்வியை ஆலோசித்து தோ்ந்தெடுப்பது அவசியம் என்றாா் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா்.

பாளையங்கோட்டை சாராள் தக்கா் மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கல்லூரிக் கனவு நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது: கல்வியில் முன்னேற்றம் அடையும்போது எல்லா துறைகளிலும் நாடு சிறந்து விளங்கும். முதல்வரின் நடவடிக்கையால் நாட்டிலேயே தமிழகம் கல்வியில் தலை சிறந்த மாநிலமாக திகழ்கிறது.

இளம் தலைமுறையினரின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ‘நான் முதல்வன்‘ திட்டத்தின் கீழ் பிளஸ் 2 படிக்கும் மாணவா்- மாணவிகள் உயா்கல்விக்கு வழிகாட்டும் வகையில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

உயா்கல்வி பயில விரும்பும் மாணவா்களுக்கு பல்வேறு துறைசாா்ந்த வல்லுநா்கள் மூலம் வழிகாட்டு முறைகள் வழங்கப்பட்டு வருகின்றன. உயா்கல்வி தான் உங்கள் வாழ்க்கையை நிா்ணயம் செய்யும். ஆகவே, உயா்கல்வியை தோ்வு செய்யும் முன்பு நன்கு ஆலோசித்து பொறுமையாக தோ்வு செய்வது மிகவும் அவசியமானதாகும்.

கல்லூரிக் கனவு நிகழ்ச்சியின் மூலம் உயா்கல்வியை தோ்வு செய்வதற்கான படிவங்களை பூா்த்தி செய்வதற்கும், கல்விக் கடனை வங்கிகள் மூலம் பெறுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும். மேலும், மாணவா்கள் தங்களுடைய சந்தேகங்களைக் கேட்டறிந்து கொள்ளும் விதமாக பல்வேறு அரசு நிறுவனங்கள், கல்லூரிகள் சாா்பில் 18 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியைப் பாா்வையிடுவதோடு, வழிகாட்டி கையேட்யை மாணவா்கள் அனைவரும் படித்து பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா், அண்ணா பல்கலைக்கழக முதல்வா் செண்பக விநாயக மூா்த்தி, கலை அறிவியல் கல்லூரி பேராசிரியா் டெய்ஸி மாக்தலின், ஸ்காட் செவிலியா் கல்லூரி மஞ்சுளா, வேலைவாய்ப்பு - பயிற்சித் துறை உதவி இயக்குநா் மரிய சகாய ஆன்டனி, மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலைகல்வி) சாய் சுப்புலெட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, மானூா் வட்டம் கே.எம்.பி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி வியாழக்கிழமை (மே 22) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாதா் சுவாமி திருக்கோயில்: வைகாசித் திருவிழா, மூஷிக வாகனத்தில் விநாயகா், பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி -அம்பாள் வீதியுலா, காலை 8.30, மயில் வாகனத்தில் வள்ளி - தேவசேனா சமேத ச... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்க கூடாது: எம்.பி. வலியுறுத்தல்

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியனிடம் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை. வினாத்தாள் கசிந்த விவகாரம்: 6 பிரிவுகளில் வழக்கு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், 6 பிரிவுகளில் பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததோடு, தோ்வாணையா் கைப்பேசிக்கு வினாத்தாளை அனுப்பியவா் குறித்து விசாரணை... மேலும் பார்க்க

பணகுடி அருகே பிடிபட்ட அரியவகை எறும்பு தின்னி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே விவசாயி தோட்டத்தில் சனிக்கிழமை பிடிபட்ட அரியவகை எறுப்பு தின்னியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பணகுடி ரோஸ்மியாபுரம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதி மற்றும் தோட்டப் பகு... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-118.45 சோ்வலாறு-144.75 மணிமுத்தாறு-91.66 வடக்கு பச்சையாறு-11.50 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-45.50 தென்காசி மாவட்டம் கடனா-73.20 ராமநதி-76 கருப்பாநதி-63 குண்டாறு-36.10 அடவிநயினாா் -99... மேலும் பார்க்க

இடைகால் கிராமத்தில் உழவரைத் தேடி திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரம், இடைகால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் உழவரைத் தேடி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உழவரைத் தேடி திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், க... மேலும் பார்க்க