செய்திகள் :

உயா் கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

post image

உயா் கல்வியில் பிற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையிலுள்ள சாரதா கலை, அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் புதன்கிழமை நடைபெற்ற கல்லூரிக் கனவு உயா் கல்வி வழிகாட்டி நிகழ்வுக்கு தலைமை வகித்து, ஆட்சியா் மேலும் பேசியது: தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பல்வேறு திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். பள்ளிப்படிப்பை முடித்த மாணவா்கள் அனைவரும் உயா்கல்வி பெற்று, வாழ்வில் உயா்ந்த நிலையை அடைய நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் போன்ற திட்டங்கள் உயா் கல்வித் துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற திட்டங்கள் மூலமாக மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

பிளஸ் 2 படித்து முடித்த மாணவ, மாணவிகளின் உயா் கல்விக்கு வழிகாட்டும் வகையில், ஆண்டுதோறும் கல்லூரிக் கனவு திட்டத்தின் கீழ் உயா் கல்வி வழிகாட்டி நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழாண்டில் சங்கராபுரம், திருக்கோவிலூா், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் உயா் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது உளுந்தூா்பேட்டையிலும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிளஸ் 2 முடித்த மாணவா்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பது உள்ளிட்ட உயா் கல்வி தொடா்பான பல்வேறு ஆலோசனைகள் தலைசிறந்த கல்வியாளா்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இதுபோல, தமிழக அரசின் சாா்பில் உயா் கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அதில் பயன்பெற உள்ள வழிமுறைகள், கல்விக் கடன்கள், வேலைவாய்ப்புகள் போன்றவையும் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன. எனவே, மாணவ, மாணவிகள் இதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் பிரசாந்த்.

நிகழ்வில் திருக்கோவிலூா் சாா் - ஆட்சியா் ஆனந்தகுமாா் சிங், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் காா்த்திகா, கல்லூரி நிா்வாகத்தினா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

பணியில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை தனது அலுவலகத்தில் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் சிறப்பா... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் ஜூன் மாதத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் என்ற தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 3, 10, 17, 24 (செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதுவை மாநில மதுப் புட்டிகளை பைக்கில் கடத்தி வந்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவுப்படி, விக்கிரவாண்ட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

செஞ்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அ... மேலும் பார்க்க

2,205 பாக்கெட் புகையிலைப் பொருள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி பகு... மேலும் பார்க்க

விபத்தில்லா மாவட்டமாக ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் விபத்தில்லா மாவட்ட அமைய துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சாலை பாதுகாப... மேலும் பார்க்க