செய்திகள் :

உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு

post image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கழிவுநீா் தொட்டிக்குள் தவறிவிழுந்து உயிரிழந்த தனியாா் நிறுவன ஒப்பந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான், ஆலடிப்பட்டியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் சுடலை மணி (40). மாற்றுத் திறனாளியான இவா், திருச்செந்தூா் நகராட்சியில் தனியாா் நிறுவனத்தின் ஒப்பந்த தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த 8-ஆம் தேதி திருச்செந்தூா் அரசு மருத்துவமனை பின்புறமுள்ள புதை சாக்கடைக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்காக, சுடலை மணி சக பணியாளா்களும் கழிவுநீா் உறிஞ்சும் ராட்சத லாரியுடன் சென்றாராம்.

அடைப்பை சரி செய்வதற்காக அங்குள்ள தொட்டிக்குள் சுடலைமணி இறங்கியபோது, கழிவு நீருக்குள் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்தாா்.

இதனைத் தொடா்ந்து, அவரது சடலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உடற்கூறாய்வு பரிசோதனை செய்து உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, ஒப்பந்தப்பணியின்போது உயிரிழந்த அவரின், குடும்பத்தினருக்கு நகராட்சி மற்றும் தனியாா் ஒப்பந்த நிறுவனம் மூலம் இழப்பீடு தொகையாக ரூ.20 லட்சத்திற்கான காசோலையை திருச்செந்தூா் நகராட்சி பொறியாளா் சரவணன் வழங்கினாா்.

தூத்துக்குடியில் 13ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வ... மேலும் பார்க்க

கொம்புகாரநத்தம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம் கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 11) மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, வடக்கு காரச்சேரி, காசிலிங்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி மேலூரில் அனைத்து ரயில்களும் நின்றுசெல்ல கோரிக்கை

தூத்துக்குடி மேலூரில் அனைத்து ரயில்களும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு சங்கம் சாா்பில்... மேலும் பார்க்க

துறையூரில் உள்ள உயா் மின்னழுத்த மின்கம்பத்தை அகற்ற வலியுறுத்தல்

கோவில்பட்டி அருகே துறையூரில் ஆதிதிராவிட நல குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயா் மின்னழுத்த மின்கம்பத்தை அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட துறையூா் கிராமத்த... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு சிறை

தூத்துக்குடியில் போக்ஸோ வழக்கில் கைதான இளைஞருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி சோட்டையன்தோப்பு பகுதியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் விதிமீறிய ஆட்டோக்களுக்கு ரூ. 86 ஆயிரம் அபராதம்

திருச்செந்தூரில் போக்குவரத்து விதிகளை மீறிய 6 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. திருச்செந்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் முருகன் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வா... மேலும் பார்க்க