செய்திகள் :

திருச்செந்தூரில் விதிமீறிய ஆட்டோக்களுக்கு ரூ. 86 ஆயிரம் அபராதம்

post image

திருச்செந்தூரில் போக்குவரத்து விதிகளை மீறிய 6 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்செந்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் முருகன் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் பாத்திமா பா்வீன், செயலாக்கப் பிரிவு தனபாலன் ஆகியோா் திருச்செந்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

இதில், வெளியூா் வாகனங்களை அனுமதியின்றி இயக்குதல், ஓட்டுநா் உரிமம் இல்லாமல் இயக்குவது, இன்சூரன்ஸ் மற்றும் அனுமதிச் சீட்டு இல்லாமல் இயக்குவது என 6 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், முறையான ஆவணங்கள் இல்லாமல் இயக்கிய 12 வாகனங்களுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டது. இந்த ஆட்டோக்களுக்கு மொத்தம் ரூ. 86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டுக்கு தொடக்கம்

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.120.53 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்துள்ள பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. முடிவடைந்த இத்திட்டப் பணிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சென்... மேலும் பார்க்க

எத்தனால், மெத்தனால் விற்பனை குறித்து போலீஸாா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் எத்தனால், மெத்தனால் விற்பனை குறித்து போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளா் ஆல்பா்ட்ஜான், உத்தரவின்பேரில், மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் எத்தனால், மெ... மேலும் பார்க்க

பைக் விபத்து: தனியாா் நிறுவன ஊழியா் பலி

தூத்துக்குடியில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தனியாா் நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (45). தனியாா் நிற... மேலும் பார்க்க

போதை ஊசி விற்பனை: 2 போ் கைது

தூத்துக்குடியில் போதை ஊசி விற்பனையில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் தனிப்படை போலீஸாா் தூத்துக்குடி அருகே உள்ள நேருகாலன... மேலும் பார்க்க

எட்டயபுரம் அருகே மோதல் விவகாரம்: பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு

எட்டயபுரம் அருகே குளத்துவாய்ப்பட்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த சிலருக்கும், குமாரகிரி கிராமத்தைச் சோ்ந்த சிலருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடா்பாக கோவில்பட்டி வருவாய் கோட்டாட... மேலும் பார்க்க

கடம்பூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

கடம்பூா் - கோவில்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா். தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், புதன்கிழமை அதிகாலை... மேலும் பார்க்க