விமான விபத்து: மருத்துவமனையில் துர்நாற்றம்! உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்!!
தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டுக்கு தொடக்கம்
தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.120.53 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்துள்ள பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
முடிவடைந்த இத்திட்டப் பணிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, மாநகராட்சி 3ஆவது வாா்டு கேடிசி நகா் கழிவு நீா் உந்தும நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கோட்டாட்சியா் பிரபு தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பெரியசாமி, எம்.சி.சண்முகையா எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆணையா் மதுபாலன் வரவேற்றாா். தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேற்பாா்வை பொறியாளா் வெங்கடேஷ் திட்ட விளக்கவுரையாற்றினாா்.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையா் சுரேஷ்குமாா், துணை மேயா் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினா்கள் ரெங்கசாமி, சுப்புலட்சுமி, வைதேகி, நாகேஸ்வரி, ஜெயசீலி, தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ் மாா்ஷலி உள்பட பலா் பங்கேற்றனா்.