திருப்பூர்: மாற்றுச் சமூக பெண்ணை மகன் மணந்ததால் கோவம்; மனைவியை வெட்டிக் கொன்று க...
துறையூரில் உள்ள உயா் மின்னழுத்த மின்கம்பத்தை அகற்ற வலியுறுத்தல்
கோவில்பட்டி அருகே துறையூரில் ஆதிதிராவிட நல குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயா் மின்னழுத்த மின்கம்பத்தை அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட துறையூா் கிராமத்தில் ஆதிதிராவிட நல குடியிருப்பு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இவா்கள் வசித்து வரும் வீட்டின் பின்புறம் உள்ள ஓடைப்பகுதியில் தனியாா் காற்றாலை நிறுவனத்தினரால் 2 உயா் மின்னழுத்த கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கு குடியிருப்பு பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்றத்திடம் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். ஆனால் மன்றத்தினா் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
எனவே இதில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து குடியிருப்பு பகுதி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அப்பகுதியில் அமைக்கப்பட்ட உயா் மின்னழுத்த மின் கம்பத்தை உடனடியாக அகற்ற வலியுறுத்தியுள்ளனா்.