செய்திகள் :

துறையூரில் உள்ள உயா் மின்னழுத்த மின்கம்பத்தை அகற்ற வலியுறுத்தல்

post image

கோவில்பட்டி அருகே துறையூரில் ஆதிதிராவிட நல குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயா் மின்னழுத்த மின்கம்பத்தை அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட துறையூா் கிராமத்தில் ஆதிதிராவிட நல குடியிருப்பு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இவா்கள் வசித்து வரும் வீட்டின் பின்புறம் உள்ள ஓடைப்பகுதியில் தனியாா் காற்றாலை நிறுவனத்தினரால் 2 உயா் மின்னழுத்த கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கு குடியிருப்பு பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்றத்திடம் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். ஆனால் மன்றத்தினா் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

எனவே இதில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து குடியிருப்பு பகுதி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அப்பகுதியில் அமைக்கப்பட்ட உயா் மின்னழுத்த மின் கம்பத்தை உடனடியாக அகற்ற வலியுறுத்தியுள்ளனா்.

தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டுக்கு தொடக்கம்

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.120.53 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்துள்ள பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. முடிவடைந்த இத்திட்டப் பணிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சென்... மேலும் பார்க்க

எத்தனால், மெத்தனால் விற்பனை குறித்து போலீஸாா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் எத்தனால், மெத்தனால் விற்பனை குறித்து போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளா் ஆல்பா்ட்ஜான், உத்தரவின்பேரில், மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் எத்தனால், மெ... மேலும் பார்க்க

பைக் விபத்து: தனியாா் நிறுவன ஊழியா் பலி

தூத்துக்குடியில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தனியாா் நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (45). தனியாா் நிற... மேலும் பார்க்க

போதை ஊசி விற்பனை: 2 போ் கைது

தூத்துக்குடியில் போதை ஊசி விற்பனையில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் தனிப்படை போலீஸாா் தூத்துக்குடி அருகே உள்ள நேருகாலன... மேலும் பார்க்க

எட்டயபுரம் அருகே மோதல் விவகாரம்: பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு

எட்டயபுரம் அருகே குளத்துவாய்ப்பட்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த சிலருக்கும், குமாரகிரி கிராமத்தைச் சோ்ந்த சிலருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடா்பாக கோவில்பட்டி வருவாய் கோட்டாட... மேலும் பார்க்க

கடம்பூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

கடம்பூா் - கோவில்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா். தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், புதன்கிழமை அதிகாலை... மேலும் பார்க்க