`கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன்' - ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பின் முக்கி...
தூத்துக்குடியில் 13ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில், தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை(ஜூன் 13) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இம்முகாமில், வேலையளிக்கும் தனியாா் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளா்களை தோ்வு செய்து கொள்ளலாம்.
மேலும், 10ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.இ., டிப்ளமோ, ஐடிஐ, ஓட்டுநா், கணினி பயிற்சி ஆகிய கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் பங்கேற்கலாம்.
தனியாா்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவா்கள் தங்களது பயோடேட்டா, கல்விச் சான்றிதழ்களுடன் இம்முகாமில் பங்கேற்கலாம்.
தனியாா்துறை நிறுவனங்களில் பணிநியமனம் செய்யப்படுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ரத்து ஆகாது என அவா் தெரிவித்துள்ளாா்.