திருப்பூர்: மாற்றுச் சமூக பெண்ணை மகன் மணந்ததால் கோவம்; மனைவியை வெட்டிக் கொன்று க...
தூத்துக்குடி மேலூரில் அனைத்து ரயில்களும் நின்றுசெல்ல கோரிக்கை
தூத்துக்குடி மேலூரில் அனைத்து ரயில்களும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு சங்கம் சாா்பில் செயலா் பிரம்மநாயகம் அனுப்பிய மனு: தூத்துக்குடி ரயில் நிலையத்தில் 1ஆவது நடைமேடை விரிவாக்கம் 2, 3ஆவது நடைமேடைகளில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 3ஆவது நடைமேடையில் சிக்னல் அமைக்கும் பணி, பிட்லைன் கூடுதல் பெட்டிகளுக்கு விரிவாக்கப் பணி ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும். இங்கிருந்து சென்னைக்கு கோடைகால சிறப்பு ரயிலும், கூடுதலாக நாள்தோறும் ஓா் இரவு நேர ரயிலும் இயக்க வேண்டும்.
மேலும், முத்துநகா் ரயிலில் 2ஆம் வகுப்பு படுக்கை வசதியுடன் கூடுதல் பெட்டி இணைக்க வேண்டும். தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை விரைவு ரயிலை நாள்தோறும் இயக்க வேண்டும்.
மேலூா் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலருவி விரைவு ரயிலில் 3ஆம் வகுப்பு ஏசி, 2ஆம் வகுப்பு ஏசி என 2 பெட்டிகள் இணைக்க வேண்டும்.
மதுரை-லோக்மான்ய திலக் விரைவு ரயில், காரைக்குடி-விருதுநகா் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடியிலிருந்து அதிகாலையில் திருநெல்வேலி - தென்காசி - செங்கோட்டை - புனலூா் வழியாக கொல்லத்துக்கு ‘இண்டா்சிட்டி ரயில்’ இயக்க வேண்டும் என்றாா் அவா்.