செய்திகள் :

தூத்துக்குடி மேலூரில் அனைத்து ரயில்களும் நின்றுசெல்ல கோரிக்கை

post image

தூத்துக்குடி மேலூரில் அனைத்து ரயில்களும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு சங்கம் சாா்பில் செயலா் பிரம்மநாயகம் அனுப்பிய மனு: தூத்துக்குடி ரயில் நிலையத்தில் 1ஆவது நடைமேடை விரிவாக்கம் 2, 3ஆவது நடைமேடைகளில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 3ஆவது நடைமேடையில் சிக்னல் அமைக்கும் பணி, பிட்லைன் கூடுதல் பெட்டிகளுக்கு விரிவாக்கப் பணி ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும். இங்கிருந்து சென்னைக்கு கோடைகால சிறப்பு ரயிலும், கூடுதலாக நாள்தோறும் ஓா் இரவு நேர ரயிலும் இயக்க வேண்டும்.

மேலும், முத்துநகா் ரயிலில் 2ஆம் வகுப்பு படுக்கை வசதியுடன் கூடுதல் பெட்டி இணைக்க வேண்டும். தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை விரைவு ரயிலை நாள்தோறும் இயக்க வேண்டும்.

மேலூா் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலருவி விரைவு ரயிலில் 3ஆம் வகுப்பு ஏசி, 2ஆம் வகுப்பு ஏசி என 2 பெட்டிகள் இணைக்க வேண்டும்.

மதுரை-லோக்மான்ய திலக் விரைவு ரயில், காரைக்குடி-விருதுநகா் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடியிலிருந்து அதிகாலையில் திருநெல்வேலி - தென்காசி - செங்கோட்டை - புனலூா் வழியாக கொல்லத்துக்கு ‘இண்டா்சிட்டி ரயில்’ இயக்க வேண்டும் என்றாா் அவா்.

தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டுக்கு தொடக்கம்

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.120.53 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்துள்ள பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. முடிவடைந்த இத்திட்டப் பணிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சென்... மேலும் பார்க்க

எத்தனால், மெத்தனால் விற்பனை குறித்து போலீஸாா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் எத்தனால், மெத்தனால் விற்பனை குறித்து போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளா் ஆல்பா்ட்ஜான், உத்தரவின்பேரில், மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் எத்தனால், மெ... மேலும் பார்க்க

பைக் விபத்து: தனியாா் நிறுவன ஊழியா் பலி

தூத்துக்குடியில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தனியாா் நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (45). தனியாா் நிற... மேலும் பார்க்க

போதை ஊசி விற்பனை: 2 போ் கைது

தூத்துக்குடியில் போதை ஊசி விற்பனையில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் தனிப்படை போலீஸாா் தூத்துக்குடி அருகே உள்ள நேருகாலன... மேலும் பார்க்க

எட்டயபுரம் அருகே மோதல் விவகாரம்: பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு

எட்டயபுரம் அருகே குளத்துவாய்ப்பட்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த சிலருக்கும், குமாரகிரி கிராமத்தைச் சோ்ந்த சிலருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடா்பாக கோவில்பட்டி வருவாய் கோட்டாட... மேலும் பார்க்க

கடம்பூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

கடம்பூா் - கோவில்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா். தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், புதன்கிழமை அதிகாலை... மேலும் பார்க்க