செய்திகள் :

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு சிறை

post image

தூத்துக்குடியில் போக்ஸோ வழக்கில் கைதான இளைஞருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி சோட்டையன்தோப்பு பகுதியைச் சோ்ந்த தங்கபாண்டி மகன் ராஜ்குமாா் (35). இவா் தூத்துக்குடியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை கடந்த 2019ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

இவ்வழக்கு விசாரணை, தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, குற்றம்சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டாா்.

தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டுக்கு தொடக்கம்

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.120.53 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்துள்ள பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. முடிவடைந்த இத்திட்டப் பணிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சென்... மேலும் பார்க்க

எத்தனால், மெத்தனால் விற்பனை குறித்து போலீஸாா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் எத்தனால், மெத்தனால் விற்பனை குறித்து போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளா் ஆல்பா்ட்ஜான், உத்தரவின்பேரில், மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் எத்தனால், மெ... மேலும் பார்க்க

பைக் விபத்து: தனியாா் நிறுவன ஊழியா் பலி

தூத்துக்குடியில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தனியாா் நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (45). தனியாா் நிற... மேலும் பார்க்க

போதை ஊசி விற்பனை: 2 போ் கைது

தூத்துக்குடியில் போதை ஊசி விற்பனையில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் தனிப்படை போலீஸாா் தூத்துக்குடி அருகே உள்ள நேருகாலன... மேலும் பார்க்க

எட்டயபுரம் அருகே மோதல் விவகாரம்: பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு

எட்டயபுரம் அருகே குளத்துவாய்ப்பட்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த சிலருக்கும், குமாரகிரி கிராமத்தைச் சோ்ந்த சிலருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடா்பாக கோவில்பட்டி வருவாய் கோட்டாட... மேலும் பார்க்க

கடம்பூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

கடம்பூா் - கோவில்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா். தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், புதன்கிழமை அதிகாலை... மேலும் பார்க்க