மத்தியப் பிரதேசம்: ``ட-வடிவ பாலம்; வாகனங்கள் எப்படி செல்லும்?'' - எதிர்க்கட்சிக...
போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு சிறை
தூத்துக்குடியில் போக்ஸோ வழக்கில் கைதான இளைஞருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி சோட்டையன்தோப்பு பகுதியைச் சோ்ந்த தங்கபாண்டி மகன் ராஜ்குமாா் (35). இவா் தூத்துக்குடியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை கடந்த 2019ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
இவ்வழக்கு விசாரணை, தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, குற்றம்சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டாா்.